என்று ஒழியும் இந்தக் கொடுமை?

viduthalai
1 Min Read

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 18 பேரை கைது செய்து, 2 படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை!
காரைக்கால், டிச.4- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

கைதான மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றது. தமிழ்நாடு மற்றும் காரைக்காலில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது.

இதனை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை 2.12.2024 அன்று சிறைப் பிடித்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 18 மீனவர்களை சிறைப்பிடித்ததோடு, ஒரு விசைப் படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள கங்கேசன் முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *