பிரதமர் மோடியின் முழுக் கவனமும் எங்குள்ளது? பணவீக்கத்தை குறைத்துக் காட்டுவதில் மட்டுமே உள்ளது! காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு!

viduthalai
1 Min Read

புதுடில்லி, நவ.29- பிரதமர் மோடியின் முழுக் கவனமும் பணவீக்கத்தை குறைத்து காட்டுவதில் மட்டுமே உள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி யுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூகவலை தளப் பதிவில், நுகர்வோர் விலை குறியீடு மற்றும் மொத்த விற்பனை குறியீட்டை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க., அரசு குறைத்துக் காட்டுவதாக சாடியுள்ளார்.

பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகிறது என தெரிவித்துள்ள ஜெய்ராம் ரமேஷ், ஆனால் மக்களின் சுமை குறையவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். நாட்டில் விலைவாசி தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது என தெரிவித்துள்ள அவர், பணவீக்கத்தை கட்டுப்படுத்தாமல், அதனை குறைத்து காட்டுவதில் மட்டுமே மோடி அரசு கவனமாக உள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார். பணவீக்கத்தை கட்டுப் படுத்துவதற்கான நடவடிக்கை களை உடனே மேற்கொள்ள வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *