லக்னோ, நவ.21 சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடி யோக்களில் சில நகைச் சுவையாகவும், சில விமர் சனத்திற்குள்ளாவதையும் காணமுடிகிறது. அந்த வகையில் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைர லாகும் திருமண ஊர்வலத்தின் வீடியோ ஒன்று…
வைரலாகும் வீடியோ உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த்நகரில் எடுக்கப்பட்டுள்ளது.
வீடியோவில், திருமண ஊர்வலத்தின் போது ரூ.100, ரூ.200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வீசுகின்றனர். மணமகன் ஊர்வலத்தின் போது அங்கு கூடியிருந்த விருந்தினர்கள் பணத்தை வீசுகின்றனர். காற்றில் பறக்கும் ரூபாய் நோட்டுகளை அங்கு கூடியிருந்த மக்கள் எடுத்து செல்கின்றனர். இந்த வைர லான வீடியோ அப்சல் மற்றும் அர்மானின் திருமணத்திலிருந்து எடுக் கப்பட்டதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத் துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனரோ, “சகோதரரே, பணத்தை ஏழைகளுக்குப் பகிர்ந் தளிக்கவும்” என்றும் மற்றொருவரோ “இவ்வளவு பணம் இருந்தால், நான்கு ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்திருக்கலாம்” என்றும் கூறுகின்றனர்.