பிறகு வெளியான அதிர்ச்சி தகவல் – மருத்துவமனை காரணமா?
ஹனோய், நவ.16 வியட்நாமில் ஒருவர் தனது மகள் தன்னைப் போல இல்லை என்று கூறி, டி.என்.ஏ. பரிசோதனை செய்யச் சொல்லி கேட்டதால் பெரும் உண்மை வெளி வந்துள்ளது.
வியட்நாமில் ஒருவருக்கு தனது மகள் தன்னைப் போலவோ, தன் மனைவியைப்போலவோ இல்லை என்ற எண்ணம் உருவாகியுள்ளது. இதனால் தனது மனைவி தனக்கு துரோகம் செய்துள்ளதாக கூறி, டி.என்.ஏ. பரிசோதனை செய்யச் சொல்லியிருக்கிறார்.
இதனை மறுத்த மனைவியிடம் அன்றாடம் சண்டையிட்டு வந்துள் ளார் அந்த நபர். மேலும் இதனால் மன உளைச்சலுக்குள்ளாகி, மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இந்த சண்டை மேலும் வளர, மனைவி ஹாங், மகள் லேனுடன் வியட்நாம் தலைநகர் ஹனோய்க்கு குடிபெயர்ந்துள்ளார்.
இங்கே தான் அவர்களது வாழ்வு ஒரு திருப்புமுனையை சந்தித்தது. லேன் சேர்ந்த புதிய பள்ளியில், அவரது வயதில், அதே பிறந்தநாள் கொண்ட வேறொரு மாணவி லேனுக்கு தோழியாகியுள்ளார்.
இவர்கள் இருவரும் ஒரே ஊரில் பிறந்ததும் இவர்களுக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் ஒரே பிறந்த நாள் கொண்டாட்டத்தை இரு குடும்பத்தினரும் நடத்த திட்ட மிட்டனர்.
அந்த பிறந்தநாள் கொண்டாட்டத் தில் தான் அந்த தோழியினுடைய தாயார் லேனை முதல் முறையாக சந்தித்தார். லேன் தன்னை போலவே இருப்பதை அந்த தாயார் உணர்ந்தார். பிறகு டி.என்.ஏ. பரிசோதனை செய்து பார்த்தபோது தான் அந்த அதிர்ச்சியான தகவல் அவர்களுக்கு தெரியவந்தது.
இரு குழந்தைகளும் பிறந்த நாளன்று, மருத்துவமனையில் அந்த குழந்தைகள் மாற்றி வைக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகம் அவர்களுக்கு வந்துள்ளது. மேலும் இந்த குழப்பத்தை எப்படிக் கையாள் வது என்றும் அவர்கள் பேசி வரு கிறார்கள். இரண்டு சிறுமிகளும் இந்த உண்மையை சொல்லி, யாருடன் இருக்க வேண்டும் என்று அவர்களே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர்கள் கருதி வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி அந்த மருத்துவ மனையின்மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.