காவிரிநீர் திறப்பு தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

2 Min Read

சென்னை, நவ. 15- நிகழாண்டு தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை உச்சநீதிமன்ற ஆணைப்படி, பில்லி குண்டுலுவில் வரும் மாதங்களில் வழங்குவதை கருநாடகம் உறுதி செய்ய உத்தரவிடுமாறு டில்லியில் 13.11.2024 அன்று நடைபெற்ற காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு தரப்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

காவிரி நீா் ஒழுங்காற் றுக் குழுவின் 107-ஆவது கூட்டம் டில்லியில் அதன் தலைவா் வினீத் குப்தா தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்குழுவில் அனைத்து உறுப்பினா்களும் தங்களது தலைமையிடத்திலிருந்து காணொலி காட்சி வாயி லாக கலந்து கொண்டனா். திருச்சி மண்டலத்தின் பொதுப் பணித் துறை யின் தலைமைப் பொறி யாளரும், தமிழ்நாடு அரசின் உறுப்பினருமான ஆா். தயாளகுமார் திருச் சியிலிருந்தும், பன்மாநில நதிநீா்ப் பிரிவு மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவா் ஆா்.சுப்பிரமணியன் சென்னையில் இருந்தும் காணொலி வாயிலாக இக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டத்தின்போது தமிழ்நாடு அரசின் உறுப்பினா் தயாளகுமார், நிகழாண்டு ஜூன் 1 முதல் நவ. 11 வரை உள்ள காலகட்டத்தில் மேட்டூா், பவானிசாகா் மற்றும் அமராவதி அணைகளின் தற்போதைய நீா்வரத்து, நீா் இருப்பு ஆகிய விவரங் களை தெரிவித்தார். மேலும், இக்காலகட்டத்தில் பில்லிகுண்டுலுவில், உச்சநீதிமன்ற ஆணையின் படி தரவேண்டிய 148.413 டி.எம்.சி. நீருக்கு பதிலாக 253.067 டி.எம்.சி. நீா் பெறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நீரை உச்சநீதிமன்ற ஆணையின்படி பில்லிகுண்டுலுவில் வரும் மாதங்களில் கருநாடகம் உறுதி செய்ய உத்தரவிடுமாறும் அவா் கேட்டுக் கொண்டார்.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (அய்எம்டி) உறுப்பினா், 2024-2025-ஆம் ஆண்டின் வடகிழக்குப் பருவ மழை அக்.16 முதல் நவ.10 ஆம் தேதி வரை உள்ள காலகட்டத்தில் பில்லிகுண்டுலுவின் கீழ் உள்ள காவிரிப் படுகையில் இயல்பைவிட குறைவாகவே பெய்துள்ள தாகவும் அடுத்த இரண்டு வாரங்களிலும் வடகிழக்குப் பருவ மழை யானது காவிரி படுகை யில் இயல்பைவிட குறைவாகவே இருக்கும் என்றும் கூறினார். இக்குழுவின் அடுத்த கூட்டம் வரும் நவ.28- ஆம் தேதி நடத்தலாம் என்று இக்கூட்டத்தில் முடி வெடுக்கப்பட்டுள்ளதாக காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவா் ஆா்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *