சாகப் போகிறாராம் ‘சாக்கு’ சொல்கிறார் ஒரு சங்கி! சாகக்கிடக்கும் என்னிடம் விசாரணையா?

viduthalai
1 Min Read

புலம்பும் பிரக்யாசிங் தாக்கூர்

2008 ஆம் ஆண்டு நடந்த மாலேகாவ் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றாளியும், அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவ அமைப்பின் உறுப்பி னருமான பிரக்யாசிங் தாக்கூருக்கு விசா ரணை அமைப்பு வாரண்ட் அனுப்பி உள்ளது. இது குறித்து நீதி மன்றத்தில் அவரது வழக்குரைஞர் ஜோஷி மிஸ்ரா கூறும்போது,

சாமியாரிணி பிரக்யா சிங்கிற்கு மூளையில் கட்டி வந்து வீங்கிவிட்டது; மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிறார். அவரது இடுப்பு எலும்பு சுத்தமாக இயங்காததால் தனது சொந்த தேவைகளைக் கூட தனிச்சையாக செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். கிட்டத்தட்ட மரணத்தின் அருகில் இருக்கிறார் என்று கூறினார். ஆனால் நீதிபதி குண்டுவெடிப்பு வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது; அவர் நீதிமன்றத்தில் 13 ஆம் தேதி கட்டாயம் நேரில் வந்து, தன் மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கம் தரவேண்டும் என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *