ஆண்டிமடம் அல்லி அம்மையார் படத்திறப்பு அமைச்சர் சா.சி.சிவசங்கர், பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் பங்கேற்பு

1 Min Read

ஆண்டிமடம், நவ.7- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்விணையரும் நகர செயலாளர் அண்ணாமலையின் தாயாருமான அல்லி அம்மையாரின் படத்திறப்பு நிகழ்ச்சி 3.11.2024 அன்று காலை 10.30 மணியளவில் பெரியார் அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது .

நகர செயலாளர் டி.எஸ்.கே.அண்ணாமலை வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.

தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அல்லி அம்மையாரின் படத்தினை திறந்து வைத்து நினைவுரையாற்றினார் .
ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திருச்சி சவுந்தரராஜன், தலைமை கழக அமைப்பாளர் க.சிந்தனை செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன்உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றினர்.

அம்மையாரின் விருந்தோம்பல் சிறப்புகளையும், உடற்கொடை வழங்கப்பட்டதையும் நினைவு கூர்ந்து பொறுப்பாளர்கள்உரையாற்றினர். திமுக ஒன்றிய செயலாளர்கள் ரெங்க. முருகன் , ஆர்.கலியபெருமாள், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் இரா. தமிழரசன், தியாக. முருகன், கோ. பாண்டியன் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதுநிலை உதவி பேராசிரியர் நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞரணி தலைவர் க. கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளந்தை தண்டபாணி நன்றி கூறினார்.

மாநில ப.க. அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சு. அறிவன்,மாவட்ட இணைச் செயலாளர் ரத்தின. ராமச்சந்திரன், மாநில மாணவர் கழக எஸ்.எஸ்.திராவிடச் செல்வன், திராவிட விஷ்ணு, பிரவின்,அருண்,செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ்செல்வன், ஆண்டிமடம் ஒன்றிய பொறுப்பாளர்கள் ந.சுந்தரம், டைல்ஸ் பட்டுசாமி, சுந்தரவடிவேல், ஓட்டுநர் பாலா, த.கு.பன்னீர்செல்வம் ஆண்டிமடம் ப.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும் நண்பர்களும் உறவினர்களும் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *