27-06-1943 அன்று கடலூர் திருப்பாதிரிபுலியூரில் தந்தை பெரியார் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் முதல் முதலில் 10 வயது சிறுவனாக மேடையில் பேசிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று 93 வயதில் 47 ஆம் ஆண்டு குற்றாலத்தில் நடைபெறும் பயிற்சிப் பட்டறை வகுப்பெடுக்க வருகை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட காப்பாளர் பால்ராசேந்திரம், தென்காசி மாவட்ட காப்பாளர் டேவிட்செல்லத்துரை, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் கே.டி.சி.குருசாமி ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பயிற்சி மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வாழ்த்துக்களை தெரிவித்தனர். உடன் கழகத் துணைப் பொதுச் செயலாளர்
ச. பிரின்சுஎன்னாரெசுபெரியார் எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா. நேரு.

ன்னாளப்பட்டி திறந்தவெளி மாநாட்டில் ஆசிரியர் உரை கேட்கக் கூடியிருந்தோர்

ஜூலை 4 ஆம் தேதி சேலத்தில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழகப் பொதுக் குழு அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் சேலம் மாவட்ட காப்பாளரும், பெரியார் பெருந்தொண்டருமான ஜவகர், கழக ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன், சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜ் ஆகியோர் வழங்கினர். உடன்: திண்டுக்கல் வீரபாண்டியன்.
