திருவாரூர் ப.ரெத்தினசாமி நினைவேந்தல் – படத்திறப்பு

Viduthalai
1 Min Read

திருவாரூர், நவ. 6- மறைந்த “சுயமரியாதைச் சுடரொளி” பெரியார் பெருந்தொண்டர் திருவாரூர் மாவட்ட காப்பாளர் ப.ரெத்தினசாமி அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு 5.11.2024 செவ்வாய்க்கிழமை காலை கங்களாச்சேரி, மில்தெருவில் அவர்கள் இல்லத்தில் திராவிடர் கழக திருவாரூர் மாவட்டத் தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் சு.கிருஷ்ண மூர்த்தி தலைமையில் மாநில விவ சாய தொழிலாளரணி செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், திருவாரூர் ஒன்றிய தலைவர் கா.கவுதமன், மேனாள் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் இரா.சிவக்குமார் ஊராட்சி ஒன்றிய தலைவர் க.சவுந் தர்ராஜன், ஆகியோர் முன்னிலையில் தலைமைக் கழக அமைப்பாளர் வீ.மோகன் படத்தினை திறந்து வைத்தார்.

திருவாரூர் ஒன்றிய துணைத் தலைவர் இரா.ராஜேந்திரன், மாவட்ட மகளிரணி தலைவர் இரா.மகேஸ்வரி, திருவாரூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் செ.பாஸ்கர், கழக பேச்சாளர் தேவ.நர்மதா, திருவாரூர் நகர தலைவர் கா.சிவராமன், நன்னிலம் ஒன்றிய தலைவர் இரா.தன்ராஜ், நன்னிலம் ஒன்றிய ப.க தலைவர் எஸ்.கரிகாலன், நாகை மாவட்ட திமுக துணைச்செயலாளர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோ.சிவக்குமார் ஆகியோர் உரைக்குப்பின் தலைமைக் கழக அமைப்பாளர் வீ.மோகன் உரை ஆற்றினார். இறுதியாக திருமருகல் ஒன்றியம் அதிமுக தகவல் தொழில்நுட்ப தலைவர் எஸ்.வினோத் நன்றி கூறினார். மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *