கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

2.11.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
கேரளாவில் பாஜகவினர் தொடர்புடையதாக கருதப்படும் கொடக்காரா ஹவாலா வழக்கை மீண்டும் விசாரிக்க பினராயி விஜயன் அரசு முடிவு.
தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு முதல் கட்டப் பணிகள் வீடு வீடாக கதவுகளில் ஸ்டிக்கர் ஒட்டித் தொடக்கம்; தொடக்கப் பள்ளியின் 48,000 ஆசிரியர்கள் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
தி டெலிகிராப்
டிரம்ப் ‘நிலையற்றவர்’, ‘பழிவாங்குவதில் வெறி கொண்டவர்’, ‘கட்டுப்படுத்தப்படாத அதிகாரத்தை விரும்புபவர்’, என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் காட்டம். சமீபத்திய சி.என்.என். கருத்துக் கணிப்புகள் மிச்சிகன் மற்றும் விஸ்கான்சினில் ஹாரிஸுக்கு ஒரு குறுகிய ஆதாயம் இருப்பதைக் காட்டியது, அதே நேரத்தில் அவரும் டிரம்பும் பென்சில்வேனியாவில் சமநிலையில் உள்ளனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா
மக்களுக்கு அளித்த காங்கிரசின் “உண்மையற்ற” மற்றும் “போலி” வாக்குறுதிகள் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கும் வகையில், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அரசாங்கம் ஏமாற்றும் தந்திரங்களில் ஈடுபடுவதாகவும், “மலிவான PR ஸ்டண்ட்களை” பிரதமர் மோடி பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.-

குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *