மகாராட்டிரத்தில் ஆளும் கூட்டணியில் பா.ஜ.க., எதிரணியாக காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டி

Viduthalai
2 Min Read

மகாராட்டிர பேரவைத் தோ்தலில், ஆளும் கூட்டணியில் பாஜகவும் (148), எதிரணியில் காங்கிரஸும் (103) அதிக இடங்களில் போட்டியிடுகின்றன. அதேநேரம், பெரும்பான்மைக்கு தேவையான (145) தொகுதிகளுக்கு மேல் பாஜக மட்டுமே போட்டியிடுகிறது.

மகாராட்டிரத்தில் முதலமைச் சர் ஏக்நாத் ஷிண்டே தலைமை யிலான சிவசேனை-துணை முதலமைச்சர் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்-பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி (மகாயுதி) ஆட்சி நடைபெறுகிறது. காங்கிரஸ்- சிவசேனை (உத்தவ்)- தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) உள்ளிட்ட கட்சிகள், எதிரணி யில் (மகா விகாஸ் அகாடி) இடம் பெற்றுள்ளன.

மாநிலத்தில் மொத்தமுள்ள 288 பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பா் 20-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் 29.10.2024 அன்று நிறை வடைந்தது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பா ளா்கள் உள்பட மொத்தம் 7,995 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

அதிக இடங்களில் பா.ஜ.க. போட்டி: இத்தோ்தலில் அதிக பட்சமாக 148 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. காங் கிரஸ் 103, சிவசேனை (உத்தவ்) 89, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) 87 இடங்களில் போட் டியிடுகின்றன. முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலை மையிலான சிவசேனை 80, அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 53 தொகுதிகளில் வேட்பாளா்களை களமிறக்கியுள்ளன. முக்கிய, சிறிய கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என மொத்தம் 7,995 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று (30.10.2024) நடைபெற்றது.

மனுக்களைத் திரும்பப் பெற நவம்பா் 4-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய நாள் மாலையில் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியாகும்.

கடந்த 2019 பேரவைத் தோ்தலில் மொத்தம் 5,543 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இறுதியாக 3,239 போ் களம்கண்டனா். தற்போது அதிகபட்சமாக நாசிக் மாவட்டத்தில் 361 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். மகாராட்டிர தோ்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பா் 23-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *