கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

21.10.2024
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பொதுமக்கள் கருத்தை அறியாமல் முடிவுகள் எடுக்க மாட்டோம். அதிகாரிகள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் – காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா திட்டவட்டம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. விடுதலை செய்வதற்கான அரசின் ஆலோசனையை நிராகரித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் முடிவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு.
தி டெலிகிராப்:
* இன்ஸ்டாகிராம் பதிவில் பி.ஆர்.அம்பேத்கரின் படங்களை வெளியிட்டதற்காக, உ.பி.யின் கான்பூரில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவனை தாக்கி ‘ஜெய் சிறீராம்’ முழக்கமிடும்படி கட்டாயப்படுத்திய மாணவர்கள் கைது.
* தற்போதைய மகாராட்டிரா சட்டமன்றத்தின் பதவிக் காலம் நவம்பர் 26ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மாநிலத்தில் நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறும், நவம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். மகாராட்டிரா தேர்தல் அட்டவணை, தங்களது எம்.வி.ஏ-வின் ஆட்சி அமைப்பதற்கான நேரத்தை குறைக்கும் பாஜகவின் தந்திரம் என சிவசேனா (உத்தவ்) சஞ்சய் ராவத் கடும் கண்டனம்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *