திராவிட மொழி ஞாயிறு தேவநேய பாவாணரின் மகன் மறைவுக்கு தமிழர் தலைவர் இரங்கல்

0 Min Read

திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் அருமை மகன் மணிமன்ற வாணன் (வயது 78) சென்னையில் நேற்று (19.10.2024) மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து வருந்துகிறோம். பாவாணருக்கு உற்ற துணையாக இருந்தவர். ‘பாவாணர் நினைவலைகள்’ என்ற நூலை எழுதியவர். அடிக்கடி சந்தித்து உரையாடக் கூடிய – பழகுவதற்கு இனிய நண்பர். அவர் பிரிவால் ஆறாத் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரின் வாழ்விணையர் அவர்களுக்கும், செல்வங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை
20.10.2024   

கி. வீரமணி

தலைவர்
திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *