பேராவூரணியில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா

viduthalai
1 Min Read

பேராவூரணி, அக்.17- பேராவூரணியில் செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற தந்தை பெரியார் அவர்கள் 146 ஆவது பிறந்தநாள் விழா திராவிடர் கழகம் சார்பில் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் தலைமையில் மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஓய்வு பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ச.பால்ராஜ் மாலை அணிவித்தார்.

திராவிடர் கழகம்

திமுக சார்பில் தஞ்சை தெற்கு மாவட்ட அவை தலைவர் சுப..சேகர், அண்ணா திமுக பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ, சேதுபாவா சத்திரம் வட்டாரத் தலைவர் அ.ஷேக் இப்ராம்சா, மறுமலர்ச்சி திமுக நகரச் செயலாளர் க.குமார், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் இரா.மூர்த்தி, மார்க்சிய கம்யூனிஸ்ட் சேது பாவாசத்திரம் வட்டாரக்குழு செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் பழக்கடை எஸ்..எஸ்..மைதீன், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொறுப்பாளர் சலாம், பெரியாரிய உணர்வாளர் சித.திருவேங்கடம், மெய்சுடர் தமிழ் பல்கலைக்கழக வெங்கடேசன், தமிழ் வழி கல்வி இயக்க பொறுப்பாளர் பழனிவேல், தமிழக புரட்சி கழக ஒன்றிய பொறுப்பாளர் மதியழகன் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு சமூக நீதி உறுதிமொழி ஏற்று மாலை அணிவித்து சிறப்பித்தனர்.

பேராவூரணி ஆவணம் சாலையில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திராவிடர் கழக கொடியை நகர திராவிடர் கழக மேனாள் தலைவர் குழ..அரங்கசாமி தலைமையில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் ஏற்றினார். நிகழ்ச்சியில் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் ஒன்றிய தலைவர் மு..தமிழ்ச்செல்வன், நகர தலைவர் சி..சந்திரமோகன், நகர செயலாளர் த.நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *