மன்னார்குடி, அக். 14- மன்னார்குடி நகர ஒன்றிய திராவிடர் கழகம், பகுத்தறி வாளர்கள் சார்பில் சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் மன்னை ஆர்.பி. சாரங்கன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திராவிடர் கழக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மன்னார்குடியில் 10.10.2024 அன்று நடைபெற்றது.
மன்னார்குடி மேலராஜ வீதி தந்தை பெரியார் சிலை அருகே மாலையில் நடை பெற்ற பொதுக்கூட்டத்திற்கு, மன்னார்குடி கழக மாவட்ட கழக அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், மாவட்டத் துணைத் தலைவர் ந.இன்பக்கடல், மாவட்ட துணைச் செயலாளர் வீ.புட்பநாதன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வை.கவுதமன், பொதுக்குழு உறுப்பினர் ப.சிவஞானம், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சி. ரமேஷ், மன்னார்குடி நகரத் தலைவர் எஸ்.என்.உத்திராபதி, மாவட்ட ப.க. துணைத் தலைவர் ச.முரளி தரன், மேனாள் மாவட்ட இளைஞரணி தலைவர் மன்னை சித்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழகச் சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் தொடக்க உரையாற்றினார். கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வம் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், கழகப் பேச்சாளர் வழக்கு ரைஞர் சு.சிங்காரவேலன், பெரியார் பெருந்தொண்டர் விக்கிரபாண்டியம் எஸ்.மணியன், திருவாரூர் பகுத்தறிவு ஆசிரியரணி இரா.சிவக்குமார், கோட்டூர் பா.இந்திரஜித்து, மாவட்ட பக அமைப்பாளர் தங்க வீரமணி, இணைச் செயலாளர் இரா. கோபால், மன்னார்குடி நகர ப.க. தலைவர் கோவி.அழகிரி, கழக வழக்குரைஞரணி எஸ்.உதயகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.இளங்கோவன், தி.க. கோட்டூர் ஒன்றிய செயலாளர் எம்.பி.குமார், மன்னார்குடி ஒன்றிய இளைஞரணி தலைவர் க.இளங்கோவன், மன்னார்குடி நகர துணைத் தலைவர் வே.அழகேசன், மன்னார்குடி ஒன்றிய துணைச் செயலாளர் கவிஞர் கோ. செல்வம், மன்னார்குடி ப.க. ச.அறிவானந்தம், மன்னார்குடி தி.க. வெ.செல்வம், ஜெ.சம்பத், பா.இந்திரசித்து, இரா.வெங்கட்ராமன்.
அ.சேவுப்பெருமாள், பெரியார் பெருந்தொண்டர் மேலவாசல் கோ.திரிசங்கு, பெரியார் பெருந்தொண்டர் மேலத்திருப்பாலக்குடி எம்.கோவிந்தராசு, மேலவாசல் அ.குணசேகரன், மன்னார்குடி நகர ப.க. செயலாளர் கோ.காமராசு, கோட்டூர் ஒன்றிய ப.க. தலைவர் சு.ராமலிங்கம், கோட்டூர் ஒன்றிய ப.க. செயலாளர் கா.சுருளிராஜன், மன்னார்குடி ப.க. தோழர்கள் வ.காமராசு, சாந்தி சேகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜேஷ், நீடாமங்கலம் ஒன்றிய தொழிலாளரணி சேகர், மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர் சாருக்கான், எடக்கீழையூர் பெரியார் பெருந்தொண்டர் பி. வீராச்சாமி, என்.லெட்சுமணன், ந.தமிழரசன், மகா தேவபட்டணம் கழகத் தோழர் எம்.எஸ்.சேகர், தி.மு.க.வை சேர்ந்த மேனாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ்.எப்.ராஜதுரை, மா.சந்திரசேகரன், இராசு.இளங்கோவன், விக்கிரபாண்டியம் தி.க. மாணவர் கழகம் பு.தமிழ்மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .
முன்னதாக, மன்னார்குடி வினோபாஜி தெருவில் உள்ள மன்னை ஆர்.பி.எஸ். இல்லத்திலிருந்து தி.க., ப.க. தோழர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வல மாகச் சென்று பாமணியில் உள்ள அய்யா ஆர்பிஎஸ் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
மன்னார்குடி ஒன்றிய தி.க. தலைவர் மு.தமிழ்ச்செல்வம் வரவேற்றார். மன்னார்குடி நகர தி.க. இளைஞரணி தலைவர் மா.மணிகண்டன் நன்றி கூறினார்.