மதரசாக்களுக்கு நிதியுதவியை நிறுத்த தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் பரிந்துரை: எதிர்க்கட்சிகள் கண்டனம்

1 Min Read

புதுடில்லி, அக்.14 மதரசாக்களுக்கான நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரி வித்துள்ளன.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய(என்சிபிசிஆர்) தலைவர் பிரியங்க் கானுங்கோ, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘கல்வி உரிமை சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் அனைத்து குழந்தைகளுக்கும் முறையான கல்வி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
ஆர்டிஅய் சட்டத்தை அமல்படுத்தா விட்டால் மதரசா வாரியங்களை மூட வேண்டும்.

வாரியங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்த வேண்டும். மதரசாக்களில் பயின்று வரும் மாணவர்களை முறையான பள்ளிகளில் சேர்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு, காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ், ‘‘இந்த நாடு அனைவருக்கும் சொந்தம். ஆனால், ஜாதி, மதங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி வெறுப்பை வைத்து அரசியல் செய்ய பா.ஜ. நினைக்கிறது. பா.ஜ.வின் பாரபட்சமான அரசியல் நீண்டகாலம் நீடிக்காது’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *