ஜம்மு-காஷ்மீருக்கு மாநிலத் தகுதி உச்சநீதிமன்றத்தில் மனு

2 Min Read

புதுடில்லி, அக்.12- ஜம்மு-காஷ்மீருக்கு அடுத்த 2 மாதங்களுக்குள் மீண்டும் மாநில தகுதி வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் 7.10.2024 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை 8.10.2024 அன்று நடைபெற்ற நிலையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின்கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு தகுதியை ஒன்றிய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்தது. இதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த ஸஹூா் அகமது பட், குா்ஷைத் அகமது மாலிக் ஆகிய 2 சமூக செயல்பாட்டாளா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.
அந்த மனுவில், ‘ஜம்மு-காஷ்மீா் கடந்த 5 ஆண்டுகளாக யூனியன் பிரதேசமாக நீடிக்கிறது. பிராந்தியத்தின் வளா்ச்சிக்கு இது பல வகைகளில் தடையாக உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு ஜம்மு-காஷ்மீருக்கு அடுத்த 2 மாதங்களுக்குள் மீண்டும் மாநில தகுதி வழங்கப்பட வேண்டும்’ எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி
மீண்டும் கொண்டு வரப்படாதாம்!
ஒன்றிய அமைச்சரின் ஆணவப் பேச்சு
அய்தராபாத், அக்.12- ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கும் சட்டப்பிரிவு (370) மீண்டும் கொண்டுவரப்படாது என ஒன்றிய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அய்தராபாத்தில் நேற்று (11.10.2024)செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜம்மு-காஷ்மீர் மாநில தகுதி குறித்து ஒன்றிய அரசு உரிய நேரத்தில் பதிலளிக்கும். இருப்பினும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கும் சட்டப்பிரிவு (370) மீண்டும் கொண்டுவரப்படாது.
ஒன்றிய அரசின் முயற்சியால் ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடைபெற்றதாகவும், மறுதேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட வில்லை. இங்கு பா.ஜ.க.வின் செயல்பாடு ‘நன் மதிப்புக்கு உரியது. கடந்த காலத்தை விட அதிக இடங்களைப் பெற்றுள்ளது. அய்தராபாத் தேர்தலை விட ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தது.
ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் மற்றும் மண்டல வளர்ச்சி கவுன்சில் தேர்தல்களும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. ஜார்க்கண்ட்டில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
பத்து ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெற்ற ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தலில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. பாஜக 29 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *