ஜம்மு-காஷ்மீருக்கு மாநிலத் தகுதி உச்சநீதிமன்றத்தில் மனு

Viduthalai
2 Min Read

புதுடில்லி, அக்.12- ஜம்மு-காஷ்மீருக்கு அடுத்த 2 மாதங்களுக்குள் மீண்டும் மாநில தகுதி வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் 7.10.2024 அன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை 8.10.2024 அன்று நடைபெற்ற நிலையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின்கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு தகுதியை ஒன்றிய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்தது. இதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த ஸஹூா் அகமது பட், குா்ஷைத் அகமது மாலிக் ஆகிய 2 சமூக செயல்பாட்டாளா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.
அந்த மனுவில், ‘ஜம்மு-காஷ்மீா் கடந்த 5 ஆண்டுகளாக யூனியன் பிரதேசமாக நீடிக்கிறது. பிராந்தியத்தின் வளா்ச்சிக்கு இது பல வகைகளில் தடையாக உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு ஜம்மு-காஷ்மீருக்கு அடுத்த 2 மாதங்களுக்குள் மீண்டும் மாநில தகுதி வழங்கப்பட வேண்டும்’ எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி
மீண்டும் கொண்டு வரப்படாதாம்!
ஒன்றிய அமைச்சரின் ஆணவப் பேச்சு
அய்தராபாத், அக்.12- ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கும் சட்டப்பிரிவு (370) மீண்டும் கொண்டுவரப்படாது என ஒன்றிய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அய்தராபாத்தில் நேற்று (11.10.2024)செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜம்மு-காஷ்மீர் மாநில தகுதி குறித்து ஒன்றிய அரசு உரிய நேரத்தில் பதிலளிக்கும். இருப்பினும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கும் சட்டப்பிரிவு (370) மீண்டும் கொண்டுவரப்படாது.
ஒன்றிய அரசின் முயற்சியால் ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடைபெற்றதாகவும், மறுதேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட வில்லை. இங்கு பா.ஜ.க.வின் செயல்பாடு ‘நன் மதிப்புக்கு உரியது. கடந்த காலத்தை விட அதிக இடங்களைப் பெற்றுள்ளது. அய்தராபாத் தேர்தலை விட ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தது.
ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் மற்றும் மண்டல வளர்ச்சி கவுன்சில் தேர்தல்களும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. ஜார்க்கண்ட்டில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
பத்து ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெற்ற ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தலில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. பாஜக 29 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *