மறைந்த முரசொலி செல்வம் அவர்களுக்கு முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் இறுதி மரியாதை

Viduthalai
1 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (11.10.2024) பெசன்ட் நகர், மின் மயானத்தில், முரசொலி செல்வம் அவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். இந்த இறுதி நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் கே.வி.தங்கபாலு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கவிப்பேரரசு வைரமுத்து, துணை மேயர் மற்றும் வாரிய உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *