அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படும்! அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அறிவிப்பு

viduthalai
1 Min Read

சென்னை, அக்.11 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கோவி.செழியன், துறையின் செயல்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை மெரினா கடற்கரை சாலை யில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன் சில் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உயர்கல் வித் துறை செயலர் கே.கோபால், தொழில் நுட்பக் கல்வி ஆணையர் ஆபிரகாம், கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, உயர்கல்வி கவுன்சில் துணைத் தலைவர் எம்.பி. விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, செய்தி யாளர்களிடம் அமைச்சர் கோவி. செழியன் கூறியதாவது: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில், தற்காலிக ஏற்பாடாக கவுரவ விரிவுரையாளர்கள் நிய மிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து,நிரந்தரமாக உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் விரைவில் தேர்வு நடத்தப்பட்டு, 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அளிக் கப்படும். பல்கலைக் கழகங் களில் காலியாக உள்ள துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட தலைமைப் பதவிகள் படிப்படியாக நிரப்பப்படும். துணை வேந்தர் நியமனத்தை பொறுத்தவரை, அரசு மற்றும் வேந்தராகிய ஆளுநரின் நிலைப்பாடுகள் வெவ்வேறாக உள்ளன. துணைவேந்தர் தேர்வுக் குழுவில் யுஜிசி பிரதிநிதி ஒருவர் இடம்பெற வேண்டும் என ஆளுநர் வலியுறுத்துகிறார். இதுகுறித்து முதலமைச்சர் மற்றும் அனுபவமிக்க உயர் அதிகாரிகளுடன் கலந்துபேசி, துணைவேந்தர் நியமனத்தில் உள்ள முரண்பாடுகள் களை யப்படும். பல்கலைக்கழகங் களுக்கு விரைவில் புதிய துணைவேந்தர்கள் நிய மிக்கப்படுவார்கள் என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *