சமூக நீதிப் போராளி மறைந்த பி. எஸ். கிருஷ்ணன் அய்.ஏ.எஸ் அவர்கள், சுதந்திர இந்தியாவில் பழங்குடி மக்களுக்கும் தலித் மக்களுக்கும் உருவாக்கப்பட்ட சட்டங்களையும், திட்டங்களையும் பற்றி மிக விரிவாக எழுதியிருக்கிற ‘CHENNAI DECLARATION ON CASTE ANNIHILATION’ (ஜாதி ஒழிப்புக்கான சென்னைப் பிரகடனம்) எனும் புத்தகத்தை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு, லயோலா கல்லூரியின் ஊடகக் கலைகள் துறையின் மேனாள் பேராசிரியர் சாரோன் அவர்களும், பழங்குடி மக்களுக்காக அருட்தந்தை ஸ்டான் சாமி ஆற்றிய பணிகளைப் பற்றி டாக்டர் பிரகாஷ் லூயிஸ் எழுதிய ‘ஸ்டான் சாமி : பழங்குடி மக்களின் அறப்போராளி’ புத்தகத்தை அருட்தந்தை ஜான்குமார் அவர்களும் வழங்கினர். (உடன்: லயோலா கல்லூரியின் ஊடகக் கலைகள் துறையின் மேனாள் பேராசிரியர் சாரோன், அருட்தந்தை ஜான்குமார், சவுத் விஷன் புக்ஸ் முதன்மை ஆசிரியர் த. நீதிராஜன், ஒளிப்பதிவாளர் ரான்சன். (சென்னை, 23.09.2024)