23.9.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இலங்கை அதிபராக இடதுசாரி கட்சியின் அனுரா குமார திசாநாயக்க தேர்வு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மோடி தொடர்ந்து வெற்றி பெறவே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற முயற்சி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* திருப்பதியில் லட்டு விவகாரத்தில், சாந்தி ஹோமம் பஞ்சகவ்ய ப்ரோக்ஷன (சடங்கு சுத்திகரிப்பு) நடை பெறுமாம்; அத்துடன் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு அறிவிப்பு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பிஜேபியின் “ஓய்வு பெறும் வயது குறித்த விதி” மோடிக்கு (75) “எல்.கே. அத்வானியைப் போல்” பொருந்துமா? உள்ளிட்ட அய்ந்து கேள்விகளை ஆர்.எஸ்.எஸ்.சை நோக்கி, அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பியுள்ளார்.
* ஒன்றிய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் ஆபத்தானது மற்றும் குறைபாடுடையது. இப்போதும் எதிர்காலத்திலும் இது தேவையில்லை, கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் தீர்மானம்.
– குடந்தை கருணா