சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்!

1 Min Read

சென்னை, செப்.21 சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் நீதிபதிகள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன்,
ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி விக்டோரியா கவுரி உள்பட 5 நிரந்தர நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த 10.9.2024 அன்று பரிந்துரை செய்திருந்தது.
அந்தப் பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நேற்று (20.9.2024) உத்தரவிட்டுள்ளார்.
விரைவில் இவர்கள் 5 பேருக்கும் பொறுப்புத் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நிரந்தர நீதிபதிகளாகப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *