ராமேசுவரத்தில் செப்.20-இல் மார்க்சிஸ்ட்ஆர்ப்பாட்டம்!

viduthalai
1 Min Read

சென்னை, செப். 16- தமிழ்நாடு மீனவா்களை மொட்டையடித்து சித்ரவதை செய்த இலங்கை அரசைக் கண்டித்து, ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 20 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். அவா் நேற்று (15.9.2024) வெளியிட்ட அறிக்கை:
இலங்கை அரசால் கடந்த ஜூலை மாதத்திலிருந்து நூற்றைம்பது தமிழ்நாட்டு மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், அந்நாட்டின் ரோந்து கப்பல் மோதலில் ஒரு மீனவா் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் சேது, அடைக்கலம், கணேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த இலங்கை அரசு 6 மாத சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்தது. இந்நிலையில் அபராதம் செலுத்தாததால் மீனவா்களை மொட்டையடித்து, கைதிகள் பயன்படுத்தும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்துள்ளனா்.

இலங்கை அரசின் நாகரிகமற்ற இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் செப்.20-ஆம் தேதி ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் சார்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த ஆா்ப்பாட்டத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த கட்சியினா் பங்கேற்கவுள்ளனா் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *