கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 14.9.2024

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று சென்னையில் மீண்டும் ஃபோர்டு நிறுவனம் கார் உற்பத்தி ஆலையை தொடங்குகிறது: முதலமைச் சரின் அமெரிக்கப் பயணத்தில் கிடைத்த மாபெரும் வெற்றி என தொழில்துறையினர் கருத்து.

*ஜிஎஸ்டி குளறுபடிகள் குறித்து சுட்டிக்காட்டிய உணவு விடுதி அதிபருக்கு பாஜக மிரட்டல்? மன்னிப்பு கேட்க வைத்த காட்சிப்பதிவு வெளியீடு; ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம்; மன்னிப்பு கேட்டார் அண்ணாமலை.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* 6 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விடு தலையானார். அமலாக்கத்துறை, சிபிஅய் கைது செய்த 2 வழக்குகளிலும் பிணை கிடைத்துள்ளதால் கெஜ்ரிவால் விடுதலை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் பிரதமர் மோடி சந்திப்பு: இது அவர்களின் பதவிப் பிரமாணங் களை காட்டிக் கொடுப்பதுடன், அரசமைப்பு சட்ட உறுதிமொழிகளையும் குலைக்கிறது என்கிறார் உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* சி.பி.அய். கூண்டில் அடைக்கப்பட்ட கிளி போல் இயங்கக் கூடாது, உச்சநீதிமன்றம் கண்டனம். அமித்ஷா பதவி விலக வேண்டும், ஆம் ஆத்மி வலியுறுத்தல்.

தி டெலிகிராப்:

* அயோத்தியில் ராமன் கோயில் துப்புரவுப் பணியா ளராக பணியாற்றும் கல்லூரி மாணவி மீண்டும் மீண்டும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; எட்டு பேர் கைது

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘உங்கள் பாட்டிக்கு நேர்ந்த கதியை தவிர்க்கவும் அல்லது சந்திக்கவும்’: ராகுலுக்கு பாஜக தலைவர் மார்வா ‘அச்சுறுத்தல்’ தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *