செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வடமணப்பாக்கம்
வி. வெங்கட்ராமனின் அறுபதாம் ஆண்டு நிறைவு மணி விழா – பணி நிறைவு பாராட்டு விழாவையொட்டி
வி. வெங்கட்ராமன் – மு. தமிழ்மொழி இணையருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் மோகனா அம்மையார் வெங்கட்ராமனுக்கு பயனாடை அணிவித்தார்.
மு. தமிழ்மொழிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்தார். இயக்க நூல்களை வழங்கிய தமிழர் தலைவர் இணையரின் இயக்கப் பணிகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், வெங்கட்ராமனின் மகள் வெ. எழில்மதி, மகன் வெ. இளஞ்செழியன் ஆகியோர் உள்ளனர். (சென்னை 9.9.2024)