பெரியார் பாலிடெக்னிக் பேராசிரியர் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் ‘Best SPOC’ விருது பெற்றார்

Viduthalai
1 Min Read

வல்லம், செப். 10- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய தொழில் நுட்பங்களை மாணவர்களுக்கு அளித்து அவர்களை சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களாக ஆக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தூன் தமிழ்நாடு அரசாள் Industrial Metaverse, Industry 4.0, Building Infrastructure Modelling பல்வேறு தொழிநுட்பங்கள் மூன்றாமாண்டு மாணவர்களுக் கும் Employability Skills, Microsoft Digital Skills போன்ற தொழிநுட்பங்கள் இரண்டா மாண்டு மாணவர்களுக்கும். English Essentials முதலாமாண்டு மாணவர்களுக்கும் நடத்தப் படும் பயிற்சி வகுப்புகள் மாண வர்களை சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களாக மாற்றுகிறது.
மேலும் இக்கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இப்பகுதியிலுள்ள பாலிடெக்னிக் பேராசிரியர்களுக்கு 18.6.2024 முதல்

24.6.2024 வரை பிரிண்ட சர்க்யூட் போர்டு டிசைன் (Printed Circuit Board Design) என்ற ஆசிரிய மேம்பாட்டு பயிற்சி (Faculty Development Programee) நடைபெற்றது.

28.8.2024 முதல் 4.9.2024 வரை இங்கிலீஸ் எஸ்ஸெண்சியல் (English Essentials) ஆசிரிய மேம்பாட்டு பயிற்சி (Faculty Development Programme)நடைபெற்றது.
நான் முதல்வன் திட் டங்களை சிறப்பாக செயல் படுத்தியதற்காக இக்கல்லூரியின் ஆங்கில பேராசிரியர் ஆர்.அய்யநாதன் மாவட்ட அளவில் சிறந்த SPOC (Single Point of Contactஸ்) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4.9.2024 அன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கில் தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநர் இன்னோசன்ட் திவ்யா வழங்க இக்கல்லூரி பேராசிரியர் பெற்றுக் கொண்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *