மைக்கேல் டி குன்ஹா தலைமையிலான விசாரணை ஆணையத்தில் வெளிவந்த உண்மை
பெங்களூர், செப். 9- கரோனா தொற்றுப் பரவலின் போது நிதியை கையாண்ட விதத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி’குன்ஹா தலைமையி லான ஆணையம் ஆய்வு செய்து இருந்தது.
கருநாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க தலைமையிலான முந்தைய கருநாடகா அரசு கரோனா நிதியை கையாண்ட விதத்தில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டிருப் பதாகவும், பல ஆவணங்களைக் காணவில்லை என்றும் குற்றம் சாட் டப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி’குன்ஹா தலைமையிலான ஆணையம் கடந்த 30.8.2024 அன்று முதலமைச்சர் சித்தராமையாவிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்த ஆணையம் கரோனா தொற்றுப் பரவலின் போது நிதியை கையாண்ட விதத்தில் நடந்த தாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து இருந்தது.
இந்த நிலையில், கரோனா முறைகேடுகள் குறித்த இடைக்கால அறிக்கையை தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளரின் (நிதி) கீழ் உள்ள அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைக்க கருநாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறுகையில், இடைக்கால அறிக்கையில் ‘நூற்றுக் கணக்கான கோடி’ ஊழல் நடந்தி ருப்பதாகக் குறிப்பிடுகிறது.
கரோனா மேலாண்மை தொடர்பான பல கோப்புகளைக் காணவில்லை என்றும் ஆணையம் கூறியுள்ளது என அவர் தெரிவித் துள்ளார்.
“ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி’குன்ஹா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையின்படி நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்பிலான முறைகேடு நடந்துள்ளது. காணாமல் போனதாகக் கூறப்படும் பல கோப்புகள் – கோப்புகளைக் கண் காணிக்க முயற்சித்த போதிலும் அவரிடம் (நீதிபதி டி’குன்ஹா) சமர்ப்பிக்கப்படவில்லை.
அதிகாரிகள் குழு கூடுதல் ஆய்வுகளை மேற்கொண்டு, அதை மீண்டும் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் முன் சமர்ப்பிக்கும். மாநில அரசு இடைக்கால அறிக் கையை மாநில சட்டமன்றத்தின் அடுத்த அமர்வில் தாக்கல் செய்ய லாம்” என்றும் அமைச்சர் எச்.கே.பாட்டீல் கூறியுள்ளார்.