புதுச்சேரியில் சிலைகள் சொல்லும் கதைகள் கல்விப் பயணம்

Viduthalai
1 Min Read

புதுச்சேரி, செப்.9- புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க மாணவர் கிளைச் சார்பாக தந்தை பெரியார் சிலை யைப் பார்வையிடும் களப்பணி நடைபெற்றது. ‘‘சிலைகள் சொல்லும் கதைகள்’’ என்ற தலைப்பில் ஏம்பலம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர்களை அழைத்துக் கொண்டு புதுச்சேரி நகரப் பகுதியில் அமைந்துள்ள சிலைகள் முறையே காந்தியார், அண்ணல் அம்பேத்கர், வ.உ.சிதம்பரம், பாரதி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மக்கள் தலைவர் வா.சுப்பையா, இலக்கியப் பேராசான் பா.ஜீவா னந்தம், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், சங்கரதாஸ் சுவாமிகள் நினை விடம், ஆயி நினைவு மண்டபம், ஜூலை 30 தியாகிகள் நினைவு சின்னம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர். மறைந்த தலைவர்களைப் பற்றிய விளக்கத்தை மாணவர்களுக்கு அளித்து சிறப்பான நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

அதன் ஒரு பகுதியாகப் புதுச்சேரி பிள்ளைத் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு வருகை தந்த மாணவ, மாணவியர்களை மாவட்டத் தலைவர் வே.அன்ப ரசன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன் ஆகியோர் வரவேற்றனர். மாநிலத் தலை வர் சிவ. வீரமணி தந்தை பெரியார் அவர்களைப் பற்றி யும் அவருடைய அடிப்படை கொள்கை கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்பு, மதம் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு ஆகியவற்றை விளக்கி மாணவர் மத்தியில் உரை நிகழ்த்தினார். மேலும் தந்தை பெரியார் சிலைப் பீடத்தில் பதிக்கப்பட்ட வாசங்கங்களை மாணவர்களுக்கு சுட்டிக்காட்டி அய்யாவின் சிலை சொல்லும் கதைகள் இதுதான் என்றும் விளக்கினார்.
நிகழ்ச்சியை கு.பச்சை யம்மாள், உ.சுகன்யா, அ.மது மிதா ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர். பேராசிரியர் நா. இளங்கோ, தலைமை ஆசிரியர் பு.விசாகன், வீர.மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *