பிரபல அய்டி நிறுவனமான Accenture-இல் இருந்து புதிய வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாத வர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
இந்தியாவில் முன்னணி அய்டி நிறுவனங்களில் ஒன்று ஆக்சென்ச்சர் (Accenture). தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கருநாடகாவில் பெங்களூர், தெலங்கானாவில் அய்தராபாத், மத்தியப் பிரதேசத்தில் இந்தூர், ராஜஸ் தானில் ஜெய்ப்பூர், மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, மகாராட்டிராவில் மும்பை, டில்லி உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் அப்ளிகேஷன் டெக் சப்போர்ட் பிராக்டிசனர் (Application Tech Support Practitioner) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 15 ஆண்டு முழுமையாக கல்வித் தகுதியை முடித்திருக்க வேண்டும். அதாவது 12 ஆண்டுகள் பள்ளிப் படிப்பையும், 3 ஆண்டு கல்லூரி படிப்பையும் முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இது ஒரு சப்போர்ட்டிங் ரோல் வகை பணியாகும். இதனால் இந்த பணிக்கு நல்ல தொடர்பு கொள்ளும் (கம்யூனிகேஷன்) திறமை இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். சம்பந்தப் பட்ட பிரிவில் 0 முதல் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் பணி அனுபவம் இல்லாமல் மேற்கூறிய திறமை இருப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான ஆண்டு ஊதியம் அல்லது மாத ஊதியம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல ஊதியம் வழங்கப்பட உள்ளது. ஊதியம் குறித்த விவரம் என்பது கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப் படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Accenture நிறுவனத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முடிந்தவரை விரைவாக விண்ணப்பம் செய்யலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.