வயநாட்டில் சுற்றுலா புத்துயிர் பெற ஒருங்கிணைந்த முயற்சி தேவை! ராகுல் காந்தி வலியுறுத்தல்

2 Min Read

புதுடில்லி, செப்.3- நிலச்சரிவால் நிலைகுலைந்து போயிருக்கும் வயநாட் டில் சுற்றுலா மீண்டும் புத்துயிர் பெற ஒருங்கிணைத்த முயற்சி அவசியம் என ராகுல் காத்தி வலியுறுத்தி உள் ளார்.

நிலச்சரிவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் சிலருடன் காணொலி மூலம் 31.8.2024 அன்று அவர் ஆலோசனை நடத்தினார். இதில் பிரியங்காவும் கலந்து கொண்டார்.

சீராக மீண்டு வருகிறது

பின்னர் இந்த காட்சிப் பதிவை தனது எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

பயங்கர நிலச்சரிவு ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து வயநாடு சீராக மீண்டு வருகிறது. அங்கு இன்னும் ஏராளமான பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தா லும், அனைத்து தரப்பினரும், அமைப்பு களும் இணைந்து அங்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வது மகிழ்ச்சியை அளிக்கிறது.

வயநாடு மக்களுக்கு பெரிதும் உதவும் ஒரு முக்கியமான அம்சத்தை நான் முன்னிலைப் படுத்த விரும்புகிறேன். அது சுற்றுலா. மழை விட்ட பிறகு அங்கு சுற்றுலாவுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதற்கு ஒருங் கிணைந்த முயற்சி அவசியம். வயநாட்டை மக்கள் பார்வை யிடுவதை ஊக்குவிக்க வேண்டும்.

மிகச்சிறந்த சுற்றுலா தலம்

ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நிலச்சரிவு ஏற்பட்டது என்பதையும், ஒட்டு மொத்த பிராந்தியத்திலும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம் ஆகும்.

வயநாடு இன்னும் மிகச் சிறந்த சுற்றுலா தலமாகவே இருக்கிறது. தனது இயற்கை அழகை ரசிக்க இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை வரவேற்க விரைவில் தயாராகி விடும்.
அழகான வயநாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு நாம் கடந்த காலங்களில் செய்ததை போல மீண்டும் ஒருமுறை இணைந்து ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.

அழுத்தம் கொடுக்க வேண்டும்

காங்கிரஸ் நிர்வாகிகளுடனான காணொலி சந்திப்பில் ராகுல் காந்தி பேசும்போது. ‘வயநாடு ஒரு ஆபத்தான பகுதி என மக்கள் நினைக்க தொடங் கினால், அது வயநாட்டின் பெருமைமிகு பிராண்டை அழித்து விடும். எனவே இந்த கருத்தை புறந்தள்ளி விட்டு, சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்’ என கூறினார்.

மேலும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, போதிய இழப்பீடு, வாடகைப் பிரச்சினை, சுற்றுலாவில் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட சில விஷயங்களில் நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *