படத்திறப்பு – நினைவேந்தல்

1 Min Read

அரசியல்

திருச்சி மாவட்ட முன்னாள் திராவிடர் கழக செயலாளர் மா.அபிமன்யு துணைவியாரும், அ.பிரபு அவர்களின் தாயாருமான  அ.நீலாவதி (83) வயது மூப்பின் காரணமாக  கடந்த 31.7.2023 அன்று இயற்கை எய்தினார். அவரின் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று (6.8.2023) ஞாயிறு காலை 11.00.மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.  திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் கலந்து  கொண்டு மறைந்த நீலாவதி அம்மையாரின் படத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாநகர அமைப்பாளர் சி. கனகராஜ், புத்தகம் பூமிநாதன், வண்ணைநகர் கழக தலைவர். ஆ.ஜெயராஜ், உறையூர் முரசொலி ஆ.செல்வம்,  அ.பிரபு, மகாலட்சுமி பிரபு, முனைவர். அ.சந்திரமோகன், முத்துலட்சுமி, வழக்குரைஞர்  சோ.ராஜேஷ் கண்ணா,  சோ.பிரேம் குமார்,  சோ.கஸ்தூரி மோகன், திவான் பகதூர், சிறீதேவி திவான் பகதூர், செல்வி. அபிநயா, சிறீஅபி அருணா, நதியா, ஆதி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *