மறைவு

1 Min Read

மருதூர் தெற்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மறைந்த திருத்துறைப்பூண்டி மாவட்ட கழக தலைவர்
ஆர்.எஸ்.சீனிவாசன் மனை வியும், திருத்துறைப்பூண்டி சாரதி மருத்துவமனை டாக்டர் எஸ்.சதாசிவம், பட்டுக்கோட்டை மாலா சிவக்குமார் இவர்களது அன்பு தாயாருமாகிய திருமதி சீனு.செல்வி அம்மையார் (72) நேற்று (28.08.2024) மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த மனத் துயரத்தோடு அறிவிக்கின்றோம். அம்மையாரது இறுதி ஊர்வலம் இன்று (29.08.2024) வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் மருதூர் தெற்கு ச.குமரவேல் அவர்களது இல்லத்தில் இருந்து புறப்பட்டது என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அறியவும் தொடர்புக்கு: 94422 64381

கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
மறைந்த சுயமரியாதை சுடரொளி இராச.சீனுவாசன் அவர்களின் துணைவியார் சீனு.செல்வி அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, வேதாரண்யம் ஒன்றிய செயலாளர் மு.அய்யப்பன், இளைஞரணி செயலாளர் கி.சுர்சித், திருத்துறைப்பூண்டி நகர தலைவர் சு.சித்தார்த்தன், நகர செயலாளர் ப.நாகராஜன், கி.வேதநாயகி, ஆகியோருடன் இணைந்து மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *