இந்தியாவில் முதலில் சூரியன் உதிப்பது எங்கே?

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதலில் சூரியன் உதிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?
இந்த பரந்து விரிந்த உலகத்தில் பல்வேறு விடை தெரியாத கேள்விகள் உள்ளன. பூமியின் சுற்றளவு, சூரியன், நிலவு என அனைத்தும் வியப்பிற்குள்ளானவை. இத்தகைய அபூர்வமான இயற்கையின் எல்லைகளை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பூமியின் சுற்றளவு, வானத்துக்கும் பூமிக்குமான தொலைவு, கடல் மட்டம், உயர்ந்த மலைமுகடுகள் என புவிச்சார்ந்த பல ஆராய்சிகள் நடத்தப்படுகின்றன. இவை அனைத்தும் நம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமானவை. அரசு தேர்வுகளில் இத்தகைய கேள்விகள் தான் பெரும்பாலும் கேட்கப்படுகின்றன.

இந்நிலையில் அத்தகைய கேள்வி ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதலில் சூரியன் உதிக்கும் என்பதுதான் கேள்வி. இதற்கு பலருக்கும் விடை தெரியாது.
இந்தியாவில் முதலில் சூரியன் உதிக்கும் மாநிலம் அருணாச்சல பிரதேசம். அன்ஜாவ் மாவட்டத்தில் உள்ள டோங் என்ற கிராமத்தில் தான் முதலில் சூரியன் உதயமாகிறது. இந்த ஊர் இந்தியாவின் ஜப்பான் என்று அழைக்கப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரத்தில் அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சோவில் ஆறு மற்றும் மலைகளால் சூழப்பட்ட கிராமம் டோங் ஆகும். சீனாவிற்கும், மியான்மருக்கும் இடையில் இது அமைந்துள்ளது.
இந்த டோங் கிராமத்தில் நாட்டின் எந்தப் பகுதிகளையும் விட ஒரு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதித்துவிடும். அதேபோல ஒரு மணி நேரம் முன்னதாகவே சூரியன் மறைந்தும் விடும். இதற்காகவே இப்பகுதி சுற்றுலா பயணிகளிடையே பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *