கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

22.8.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை
3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலை; 10 லட்சம் கோடிக்கு முதலீடுகள் குவிந்தன: முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
‘அரசியல் சட்டத்தை காப்போம்’, ராகுல் தலைமையில் நாடு முழுவதும் கருத்தரங்கம் நடத்த காங்கிரஸ் முடிவு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பினை வரும் செப்டம்பரில் தொடங்க ஒன்றிய அரசு யோசனை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இடஒதுக்கீட்டை தவிர்த்து கட்டமைக்கப்பட்ட ‘லேட்டரல் என்ட்ரி’ திட்டத்தை உருவாக்கியது. தற்போது, ரத்து செய்ததற்கு ‘சமூக நீதி’ என கூறும் ஒன்றிய அரசின் முரண்பாட்டை வெளிப்படுத்துகிறார் கட்டுரையாளர் ஜெய் மசூம்தார்.
தி டெலிகிராப்
தகுதியுடைய எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு பொதுப்பிரிவில் இடமளிக்க அனுமதிக்க மறுத்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு.
தி இந்து
அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை நடத்துவது குறித்து ஒன்றிய அரசு இன்னும் அழைப்பு விடுக்கவில்லை, ஆனால், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு சேர்க்கும் வகையில் தரவு சேகரிப்பை விரிவு படுத்துவதற்கான தீவிர விவாதம் நடந்து வருகிறது என்று அரசு உயர்மட்ட வட்டாரம் ‘தி இந்து’விடம் தெரிவித்தது.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *