முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 27 அன்று அமெரிக்கா பயணம்!

viduthalai
2 Min Read

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு!

சென்னை, ஆக.16– தமிழ்நாட்டிற்கு மேலும் தொழில்முதலீடு களை ஈர்ப்பதற்காக முதல மைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகிற ஆக.27ஆம் தேதி அமெ ரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 17 நாட்கள் பயணத்தின்போது, முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்துமுதலீடுகள் குறித்து பேசும் முதலமைச்சர் அவர்கள், அமெரிக்க வாழ் தமிழர்களையும் சந்தித்து கலந்துரையாடுகிறார்.

தமிழ்நாட்டை, 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவது என்ற இலக்குடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம், ஏற்கெனவே, சிங்கப்பூர், ஜப்பான், துபாய், சுவீடன், ஸ்பெ யின் உள்ளிட்ட நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன்மூலம் பலஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு கிடைத்தன.

கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டா ளர்கள் மாநாட்டில் 6.64 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் சுமார் 27 லட்சம்வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலை யில், தமிழ்நாட்டுக்கு மேலும் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வருகிற ஆக.27ஆம் தேதி முதல் 17 நாட்கள் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சென்னையில் இருந்து 27 ஆம்– தேதி அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 28 ஆம் தேதி அங்குள்ள சான் பிரான்சிஸ்கோ செல்கிறார். 28ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 2ஆம்தேதி வரை சான் பிரான்சிஸ்கோவில் முக்கிய முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை, முதலமைச்சர் சந்தித்துப் பேச உள்ளார்.

ஆகஸ்ட் 29 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆகஸ்ட் 31ஆம் தேதிஅமெரிக்கவாழ் தமிழ்நாட்டு மக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். செப்டம்பர் 2 ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், செப்டம்பர் 12ஆம் தேதி வரை அமெரிக்காவில் பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள பன்னாட்டு முன்னணி நிறுவனங்களின் முத லீட்டாளர்களை சந்தித்து தொழில் முதலீடுகள் குறித்து பேச உள்ளார்.

செப்டம்பர் 7ஆம் தேதி சிகாகோவில் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார். உயர்தர வேலைவாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு என்ற முக்கிய குறிக்கோளுடன் முதல மைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெ ரிக்க சுற்றுப்பயணம் அமைய உள்ளதாக தொழில் துறை அமைச்சர்  டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *