நிலவில் உயிர் பாதுகாப்பு!

Viduthalai
1 Min Read

அருகி வரும் உயிரினங்களை பாது காப்பதற்காக ‘உயிரி பாதுகாப்புக் களஞ் சியம்’ ஒன்றை நிலவில் அமைக்கலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. பூமியில் இந்த உயிரினங்கள் இயற்கைப் பேரழிவு, கால நிலை மாற்றம் மற்றும் புவிசார் அரசியல் மோதல்கள் ஆகியவற்றால் அழிந்து விடாமல் இருக்க, நிலவில் வைத்து பாதுகாக்கலாமாம்.

இந்த அபூர்வமான தீர்வு சிமித்சோனி யன் தேசிய பூங்கா மற்றும் உயிரியல் பாதுகாப்பு நிறு வன ஆய்வளார்களால் முன்மொழியப்பட்டுள்ளது. ‘பயோ சயின்ஸ்’ எனும் இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது. 163040 உயிர் இனங்களை மதிப்பீடு செய்ததில் 45300 இனங்கள் அழியும் தறுவாயில் உள்ளன என்கிறது பன்னாட்டு இயற்கை பாது காப்பு ஒன்றியம் (IUCN).

செல், திசு அல்லது ஒரு உயிரி முழுவதையுமே மிக குறைவான வெப்பத்திற்கு குளிர்வித்து அவை அழியாமல் இருக்கும் நிலையில் பாது காக்கும் முறை குளிர்பேணல் (Cryopreservation) எனப்படுகிறது. இந்த வெப்பநிலையில் உயிரின் எல்லா இயக்கமும் செல்கள் இறப்பிற்குக் காரணமான உயிர் வேதி வினைகளும் நிறுத்தப்படுகின்றன.
நிலவின் துருவப் பகுதிகளுக்கு அருகிலுள்ள பகுதி களில் மிகவும் குளிர்ந்த வெப்ப நிலை (-371 ஃபாரன் ஹீட் அளவில்) இருப்ப தால் இவை திசுக்களை பாதுகாக்க உகந்தது. பூமியில் திசுக்களை பாது காப்பதை விட மிகக் குறைந்த ஆற்றலே இதற்கு தேவைப் படும்.

மனித குறுக்கீடுகளும் இருக்காது. எதார்த்தத்தில், இந்த ‘நிலவுக் கருவூலம்’ நிறுவு வவதற்கு மிக நீண்ட காலம் ஆகும். விண்வெளிப் பயணத்தில் திசுக் களை பத்திரமாக எடுத்துச் செல்வது, பன்னாட்டு ஒருங்கிணைப்பு, காஸ்மிக் கதிர் விளைவுகள் ஆகிய பிரச்சினைகள் உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *