பத்திரிகையாளர்கள் மீதான தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்கக் கூடாது

2 Min Read

கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம், ஆக. 14- பத்திரி கைகள், பத்திரிகையாளர்கள் மீதான தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்கக்கூடாது என கீழமை நீதி மன்றங்களுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலுவா நகராட் சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர் மலையாள மனோரமா நாளிதழ் மற்றும் அதன் ஆசிரியர், செய்தியாளருக்கு எதிராக ஆலுவாகுற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த குற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி மலையாள மனோரமா நாளிதழ் சார்பில் கேரளஉயர் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த கேரளஉயர் நீதிமன்ற நீதிபதி ஏ.பதரூதீன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பத்திரிகைகள் விளங்குகின்றன. நாட்டின் அன்றாடநிகழ்வுகள், குறிப் பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்த செய்திகளை பொதுமக்களுக்கு தெரிவிப் பதில் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பங்கு அளப்பரியது.

சுதந்திரத்தை மீறும் செயல்: இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 499 மற்றும் பிரிவு 500-இன் கீழ் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக தேவையற்ற அவதூறு வழக்குகளை தொடர்வது என்பது பத்திரிகை சுதந் திரத்தையும், செய்திகளை அறிந்து கொள்ளும் மக்களின்உரிமையையும் மீறும் செயல். இந்தவழக்கின் மூலமாக கீழமை நீதிமன்றங்களை எச்சரிக்க வேண்டிய சரியான தருணம் இது.

அவதூறு வழக்கு ரத்து: பொது வாக பத்திரிகைகள் மற்றும் பத்திரி கையாளர்களுக்குஎதிரான அவதூறு குற்றச்சாட்டுகளை பரிசீலிக்கும்போது விசாரணை நீதிமன்றங்கள் குறிப்பாக குற்றவியல் நடுவர்கள் இனிவரும் காலங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இந்த வழக்கில் பெண் நகராட்சி கவுன்சிலர் தொடர்பாக செய்தி வெளி யிட்டதற்காக மலையாள மனோரமா, அதன் ஆசிரியர் மற்றும்செய்தியாளர் மீது ஆலுவா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளஅவதூறு வழக்கு தேவையற்ற ஒன்று என்பதால் ரத்து செய்யப்படுகிறது.

பத்திரிகை சுதந்திரத்தை கட்டுப் படுத்துவது என்பது கும்பல் ஆட்சி யாகத்தான் பார்க்கப்படும். ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயக கொள்கைகளின் சமநிலையை பராமரிக்க பத்திரிகை சுதந்திரமும், நாட்டின் முக்கியமான வளர்ச்சியை அறிந்து கொள்ளும் மக்களுக்கான உரிமையும் கைகோர்த்து செல்ல வேண்டும். அந்த பத்திரிகை சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிப்பது என்பது தனிப்பட்ட கும்பல் ஆட்சிக்கு வழிவகுத்து விடும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *