உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல இணையவழி நுழைவுச்சீட்டு

1 Min Read

அரசியல், இந்தியா

புதுடில்லி,ஆக.12 – உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு செல்ல இணை வழி மூலம் நுழைவுச்சீட்டு வழங்கும் நடைமுறை அமல் செய் யப்பட்டு உள்ளது.

உச்ச நீதிமன்ற வளா கத்துக்குள் செல்ல நுழை வுச் சீட்டு பெறுவது கட் டாயமாகும். இதன்படி உச்ச நீதிமன்ற வளாக வாயிலில் அமைந்துள்ள கவுன்ட்டரில் நுழைவுச் சீட்டை பெற வேண்டும். ஒவ்வொரு நாளும் கவுன்ட்டரில் நுழைவுச் சீட்டை பெற வழக்குரை ஞர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத் திருக்கின்றனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சுஸ்வாகதம் என்ற இணைய தளத்தை  (https://suswagatam.sci.gov.in)  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறி முகம் செய்தார். இந்த இணையதளம் வாயிலாக அனைவரும் ஆன்லை னில் நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

உச்ச நீதிமன்ற வளா கத்துக்கு செல்ல விரும்பும் பார்வையாளர், மனுதா ரர் ஆகியோர் தங்களது பெயர், முகவரி உள் ளிட்ட விவரங்களை பதிவு  செய்து அடையாள ஆவணங்களையும் பதி வேற்றம் செய்ய வேண் டும். பின்னர் எஸ்எம்எஸ், இ-மெயில் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். இணையதளம், இ-மெயிலில் இருந்து நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வழக்குரைஞர்கள் மற் றும் அவர்களின் உதவி யாளர்கள், செய்தியாளர் கள் உள்ளிட்டோர் ஒரு மாதத்துக்கான நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள் ளலாம்.

இதுகுறித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கூறும் போது, “உச்ச நீதிமன்றத் தில் கடந்த ஜூலை 25ஆம் தேதி சோதனை அடிப்படையில் இணைய வழி நுழைவுச் சீட்டு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் வெற்றி பெற் றதை தொடர்ந்து முழு மையாக அமலுக்கு வந்து உள்ளது” என்றார்.

சொலிசிட்டர் ஜென ரல் துஷார்மேத்தா கூறும் போது, “உச்ச நீதிமன்றத் துக்கு காலை 9 மணிக்கு வந்தால் மட்டுமே 10.30-க்குள் நுழைவுச்சீட்டு கிடைக்கும். இணையவழி நுழைவுச்சீட்டு நடை முறையால் இனிமேல் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *