‘நீட்’ தேர்வு : மாணவர்களே! தற்கொலை எண்ணத்தைக் கொள்ளாதீர்!

1 Min Read

தமிழர் தலைவர் உருக்கமிகு வேண்டுகோள்!

‘நீட்’ தேர்வினால் சென்னையைச் சேர்ந்த தந்தையும், மகனும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

இதுகுறித்துத் தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை குரோம்பேட்டையில் மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் வாழ்வை முடித்துள்ள சோகம்.

ஆளுநர் ரவி போன்றோருக்கு இனி மேலாவது புரியுமா?

‘நீட்’ தேர்வு ரத்துக்கு நான் கையெழுத்திட மாட்டேன் என்று தமிழ்நாடு ஆளுநர் ரவி நேற்று முன்தினம் (12.8.2023) சம்மன் இல்லாது ஆஜரானதுபோல் கூறியிருந்தார்.

இவருக்கு இல்லாத அதிகாரத்தை, பொல்லாத எண்ணத்துடன் இப்படி உளறியுள்ளார். இந்த உயிர்ப் பலிகளுக்கு யார் பொறுப்பேற்பது? மனிதத்தை மதிக்காத ‘மனிதர்’களாக இப்படி மமதையுடன் பேசுவதனால் யாருக்கு என்ன பயன்?

மகனையும், தந்தையையும் இணைந்து குடும்பம் குடும்பமாக பலி கேட்கும் ‘நீட்’ தேர்வினால், இன்னும் எத்தனை எத்தனை உயிர்ப் பலிகள் ஏற்படுமோ? 

மாணவர்களே தற்கொலை எண்ணத்தைத் தவிர்த்து துணிவுடன் நிலைமையை எதிர் கொள்ளுங்கள்!

 மக்களே உணருங்கள்.!

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை
14.8.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *