Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: மானமிகு கலைஞர் நினைவுநாள் சிந்தனை
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
செய்தியும் சிந்தனையும்....!

மானமிகு கலைஞர் நினைவுநாள் சிந்தனை

Last updated: August 4, 2024 3:33 pm
Published: August 4, 2024
செய்தியும் சிந்தனையும்....!
SHARE

பெரியாரை விட்டுப் பிரியாமல் இருந்திருந்தால்….பெரியாரை விட்டுப் பிரியாமல் இருந்திருந்தால்….

செய்தியும் சிந்தனையும்....!உடன்பிறப்பே,
தேர்தல் களம் புகுந்திட பல்வேறு கட்சிகளின் பாசறைகள் ஏறத்தாழத் தயார் நிலையில் அமைக்கப்பட்டு விட்டன. எதிர் வரிசையில் நிற்கக் கூடிய அணி தேர்ப் புரவி ஆட்பெரும் படையை உற்றுப் பார்க்கிறேன். எதிர் வரிசையில் இந்திரஜித்தனைக் காண முடியாத காரணத்தை உணர்ந்து கொண்டவுடன் – களத்தில் அந்த யோசனைக்கு இடமளிப்பது நமது குறியைக் குலைத்துவிடும் என்பதால் அதைப்பற்றி அதிகமாக கவலைப்படாமல், ஒருசில நிமிடங்கள் அது பற்றிய சிந்தனையிலே ஈடுபட்டேன்.
5000 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்ட திராவிட உணர்வு பட்டுப்போகாமல் காப்பாற்றி வந்த பெரியாரெனும் பேருருவில் – பிரிவுக் கணைகள் புகுந்து – இரு இயக்க மானோம். அவற்றில் ஓர் இயக்கம் அண்ணா தலைமையில் இன உணர்வு பகுத்தறிவு இயக்கமாகவும் – பிறிதொரு இயக்கம் பகுத்தறிவு கவலை யின்றி; ஆனால் பண்பாடு காத்திடும் இயக்கமாக அருமை நண்பர் எம்.ஜி.ஆர். தலைமையிலும் இயங்கிய ஏற்றமிகு நிலைக்கண்டு – அதன் எழிலைக் குறைத்திட எத்தனையோ சதிகள், சாகசங்கள்! அத்தனைக்கும் ஈடு கொடுத்து ஒன்றை ஒன்று வென்றும் – ஒன்றால் ஒன்று வீழ்ந்தும் – அவ் விரு திராவிட இயக்கங்களும் தேசத்தை ஆளும் சக்தியாக செழித்து வளர்ந்தது கண்டு – அவ்விரண்டையும் அழித்தொழிக்க அய்தீகப் படை திரண்டது. இரு படைகளும் ஒரு படையாய் இருந்து – செரு பகை வீழ்த்திட அணி வகுப்போம் வாரீர் என்று வடக்கிருந்து பறந்து வந்த சமரசப் புறாவையும் – அதன் சிறகொடித்து விரட்டிவிட்டனர் சதிகாரர்கள். அதன் பிறகும் அமைதியில்லை – சகோதர யுத்தம் தொடரட்டுமென்றும் – அப்போதுதான் சர்க்கரை தம் வாய்க்கு நிறைய கிடைக்கு மென்றும் எண்ணியோர் கண்ணியம் துறந்த காரியத்தில் ஈடுபட்டதால் – திண்ணியராம் திரா விடத் தலைவர்கள் உருவாக்கிய இயக்கம், சிதைந்து சிதறுண்டு போக சிலந்திகள் வலைபின்னத் தொடங்கின. அந்த வலையில் சிக்காத இயக்கம் தான் அண்ணா உருவாக்கிய தி.மு.க. எனும் இந்தத் தீரர்கள் மிகு இயக்கம். அதனால்தான் வலை அறுந்திடவும் இல்லை – விலை போகவும் இல்லை – நிலை குலையாத நேர்மை, நியாயம், நீதி, உண்மை, உறுதி, வாய்மை அனைத்தும் கொண்டு வலிமை சேர் இயக்கமாக அறப்போர் வாள் தூக்கி அணி வகுப்பில் முந்தி நிற்கிறது. எந்த வொரு இயக் கமும் ஜனநாயக வழித் தடத்தில் தேர்தலைச் சந்திக்க களம் இறங்கி விட்டால் – ஜனநாய கத்தைக் கட்டிக் காக்க வேண்டிய பொதுமக்கள் மாத்திரமல்லாமல் அந்தப் பொது மக்களிடத் திலே – தமது கட்சிக்காக ஆதரவு திரட்டக் கூடிய தொண்டர்கள், தோழர்கள் அணி வகுத்துக் குவிந்திடுவது இயல்பேயாகும். அவர்கள் எந்த வரிசையினராயினும் நம் வரிசையினர் என்றே போற்றிப் புகழ்வோம். எதிரெதிர் அணியிலே அவர்கள் நிற்க நேரிட்டாலும் அவர்களும் நாமும் சேர்ந்து ஜன நாயகக் கோயில் திருப்பணியை நடத்தவே – நடத்தி முடிக்கவே – அதில் எழிலும் ஏற்றமும் கண்டு களிக்கவே – நாம் சேர்ந்துள்ளோம் இந்த இயக்கத்தில் என்ற நினைப்போடு பணியாற்றினால் மாண்பு காத்திட – மனித நேயம் போற்றிட – நாம் பிறந்த மண்ணின் புகழ் பெருக்கிட – நம்மை நாமே அர்ப்பணித்துக் கொண்டவர்களாவோம்.
நம் வியர்வையால் கிடைக்கும் வெற்றியைப் போற்றிடவும் – நமது அயர்வினால் அதனை விடுத்து அதற்காக ஜனநாயக மாண்பினையே தாக்கிடவு மான நிலைக்கு நம்மை நாமே தள் ளிக் கொள்ளாமல் இருக்கத்தான் – காற்றடிக்கும் நேரத்திலேயே பதர் போக்கி – பயன் விளைக்கும் தானிய மணிகளைக் குவித்து வைத்ததுபோல் நமது படையின் வீரர்களை அணி வகுத்து வைத்திருக்கிறோம்.
சோர்வறியாத படை –
சோடை போகாத படை –
சொர்க்கம் அழைக்கிறது வா என்றாலும், அதில்
சொக்கிப் போய் சொன்னது ஒன்று; செய்வது ஒன்றாக-
போரிடுவது போன்ற போலிப் படையல்ல இப்படை;
இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?
என நம் அண்ணா அடிக்கடி சொல்வாரே
அப்படையே இப்படையாம்!
பெரியாரை விட்டுப் பிரியாமல் இருந்திருந் தால் – இடையில் இப்படை பெறும் வெற்றிதான் இமாலய வெற்றியாகும் – இமாலயத்தை வளைக்கும் வெற்றி யாகும்.
எனினும் என் தலைவர் இருந்த நாற்காலி காலியாகவே இருக்கிறது என மொழிந்து – பெரியாரின் தொண்டனாக – அவரின் சீடனாக – அவரின் கொள்கை நாதமாக விளங்கிய அண்ணா –
நமையெல்லாம் ஒருங்கிணைத்து – பொருதடக்கை வாள் கொடுத்து – ஜனநாயக அறப்போரில் வென்றிடுக தம்பிகாள்! என்று அனுப்பி வைத்தார். அவர்களில் ஓரிரு தம்பிமார்கள் எங்கெங்கோ சிதறிப் போயினர் என்றாலும் – அங்கெல்லாம் அலைந்து திரிந்து அவர்களையும் ஒன்றிணைக்க – அரும்பாடுபட்டவனின் கரம்தான் இந்தக் கரம்.
இந்தக் கரம் தழுவும் உணர்விலே கட்டுண்டு – வாரீர் அனைவரும் ஒருங் கிணைந்து களம் காண்போம் என்ற ழைக்கும் வேளை இது!
திராவிடர்கள் நெல்லிக்காய் மூட்டை களா?
திராவிடர்கள் நெல்லிக்காய் மூட்டை என எதிரிகள் துள்ளிக் குதிக்கும் நிலைதனை மாய்ப்போம்.
விடுபட்டோர் –
விரட்டப்பட்டோர் –
துரத்தப்பட்டோர் –
விலை போகாது வெங்குருதி தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு – தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி
வந்திடுவீர் வாகை சூட என்று கண்மூடி தவம் இருக்கும் துறவிகளைப் போல் – தூய ஞானிகளைப் போல் – நான் தவம் இருக்கின்றேன் – படை பலம் போதாது என்ப தால் அல்ல! இருக் கின்ற படை இன்னும் வலிமையாய் – உறுதியாய் – நிச்சயம் வாகை சூடுவதாய் அமைய வேண்டும் என்பதற்காக!
என்னரும் உடன்பிறப்புக்காள்! என் உயிரினும் இனியோரே!
இன்ப முடிவினை எல்லோரும் சேர்ந்து சுவைப்போம்!
வருக! வருக! வரிப்புலி வரிசையே வருக!
அன்புள்ள,
மு.க.
– நன்றி: ‘முரசொலி’, 22.3.2011

கலைஞரின் கணிப்பு…..
5 அல்லது 10 ஆண்டுகளுக்குப் பின்
நான் இந்த நேரத்தில் தந்தை பெரியார் அவர்களுடைய பெயரால் உள்ள இந்த மன்றத்திலே அமர்ந்து சொல்கிறேன். இனி பத்தாண்டு காலத்திற்கு மேல் ஜாதியை வைத்து எவரும் தமிழ்நாட்டிலே யாரையும் ஏமாற்ற முடியாது. ஏனென்றால் பார்க்குமிடம் எல்லாம், இன்றைக்கு இளைஞர்கள் தயாராகிக் கொண்டு வருகிறார்கள். நான் திராவிடர் கழகத்திலே உள்ள இந்த இளைஞர்களையும் பார்க்கிறேன். திராவிட முன் னேற்றக் கழகத்திலே இன்றைக்கு வளர்ந்து வருகின்ற இளைஞர்களையும் பார்க்கிறேன். அந்த இளைஞர் அணியினர் இன்றைக்கு வேகமாக விறுவிறுப்பாக திராவிட இயக்கத்தின் கொள்கைகளை, சமுதாயக் கொள்கைகளை பின்பற்றக்கூடிய வீராதி வீரர்களாக, இளைஞர் அணியாக வளர்ந்து வருகின்ற காட்சியைப் பார்க்கின்றேன். அவர்கள் எல்லாம் இன்னும் அய்ந்தாண்டு காலத்திற்குப் பிறகு, பத்தாண்டு காலத்திற்குப் பிறகு, இந்த இயக்கத்தை, இந்தச் சமுதாயத்தை வாழ்த்தி, ஏற்று, வளர்த்து நடத்தக் கூடிய ஆற்றலும், அறிவும் பெற்றவர்களாக ஆகிவிடுவார்களேயானால் பிறகு ஜாதிக்கு வேலையே இல்லை.
– தமிழர் தலைவர்ஆசிரியர் கி.வீரமணி பிறந்த நாள் விழாவில் கலைஞர் (சென்னை 2-12-2012)

தமிழர்களுக்கு
புதுவாழ்வு தந்தவர்
* தந்தை பெரியார்
கலைஞர் அவர்கள் நமக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு என்று சொல்ல வேண்டும். இதற்கு முன் ஆட்சியில் இருந்த கட்சிக்காரர்களைவிட பகுத்தறிவாளராவர். அவருக்குப் பிறந்த நாள் மலர் வெளியிடுவது அவரது கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகும்.
மனிதர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதாவது நம்பிக்கையாளர்கள், பகுத்தறிவாளர்கள் என்பதாகும். முன்னோர்கள் சொன்னது பழைய காலம் முதல் இருந்து வருவது என்பதற்காக எதையும் சிந்திக்காமல் கடவுள் – மதம் – ஜாதி – சாஸ்திரம் என்கிற பெயரால் பல மடைமைகளைச் சிந்திக் காமல் ஏற்றுக் கொள்பவர்கள் நம்பிக்கை யாளர்கள் ஆவார்கள்.
அறிவைக் கொண்டு ஆராய்ந்து அறி விற்கும் ஏற்றதை ஏற்றுக் கொண்டு மற்றதை தள்ளிவிடக் கூடியவர்கள் பகுத்தறிவாளர்கள் ஆவார்கள். இதில் நம் நாட்டில் நம்பிக்கையாளர்கள்தான் அதிகம். பகுத்தறிவாளர்கள் இருப்பது மிகமிகக் குறைவேயாகும். நமது கலைஞர் அவர்கள் தலைசிறந்த பகுத்தறிவுவாதி ஆவார்.
இத்தகைய பகுத்தறிவாளராகவும் ஆட்சிக்கலையில் அரிய ராஜ தந்திரியாகவும், முன்யோசனையுடனும் அவர் நடந்து வருவதின் மூலம் தமிழர்கட்கு புதுவாழ்வு தருபவர் ஆகிறார் நமது கலைஞர். அவர் பல்லாண்டு வாழ்ந்து அவர் பணி வெற்றியடைய வேண்டுமென ஆசைப்படுகிறேன்.
– தலைவர் கலைஞர்
93ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் – 2016

Also read

செய்தியும், சிந்தனையும்…!
செய்தியும், சிந்தனையும்…!

“பெரியாரைப் பற்றிப்
பேசாமல் இருக்க முடியாது!”
*கலைஞர்
பெரியாருடைய பள்ளியிலே சட்டாம் பிள்ளையாக இருந்து நம்மை வழி நடத்தியவர் பேரறிஞர் அண்ணா. அந்தக் கல்லூரியிலே படித்த மூத்த மாணவர்களிலே ஒருவன் நான். நான்தான் இன்றைக்கு உங்களை யெல்லாம் சந்திக்கிறேன் – என்றால் எப்படி? எனக்குப் பகுத்தறிவு பாடம் போதித்த பெரியாரை மறவாமல், என்னுடைய உள்ளத்திலே சுயமரியாதை உணர்வை விதைத்த அய்யாவை மறவாமல், அந்த பெரியார் தந்த அருமையான கொள்கைகளையெல்லாம் நாட்டிலே பரப்ப வேண்டும் என்ற அந்த உணர்வோடு உங்களையெல்லாம் சந்திக்கிறேன். இன்று உங்களுக்குக்கூட ஒரு வியப்பாக இருக்கும். என்ன கருணாநிதியை அழைத்து கூட்டம் போட்டால். அவர் தேர்தலைப் பற்றி பேசுவார். உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கேட்பார் என்று எண்ணினால், பெரியாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாரே! அண்ணாவைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாரே! என்று நீங்கள் கருதுவீர்களேயானால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். கருணாநிதியாரைப் பற்றிப் பேசினாலும், யாரைப்பற்றி புகழ்ந்துரைத் தாலும், யாரைப்பற்றி கவிதைப் பாடினாலும் அதற்கெல்லாம் மூலவித்தாக இருப்பது சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம், – தந்தை பெரியாருடைய போதனைகள், அறிஞர் அண்ணாவினுடைய அறிவுரைகள் இவைகள் இல்லாமல் கருணாநிதியால் பேச முடியாது.
(6.4.2014 அன்று ஈரோடு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலைஞர் – முரசொலி 7.4.2014)

 

Ad imageAd image
செய்தியும் – சிந்தனையும்
செய்தியும் சிந்தனையும்….!
செய்தியும், சிந்தனையும்…!
செய்தியும், சிந்தனையும்…!
செய்தியும், சிந்தனையும்…!
TAGGED:சிந்தனை
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?