கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
14.8.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவர் ஒப்பு தலுக்காக காத்திருக்கிறது. நீட் விலக்கு மசோதாவுக்கும் ஆளுநருக்கும் இனிமேல் எந்தத் தொடர்பும் இல்லை யென மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்துள்ளார்.
* சர்வாதிகார ஆட்சி நடத்திடவே, குற்றவியல் சட்டங்களை மாற்றியமைக்க மோடி அரசு முயற்சிக்கிறது என கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.
தி இந்து:
* மணிப்பூரில் ஏற்பட்டுள்ள காயங்கள் ஆற பல ஆண்டுகள் ஆகும் என ராகுல் காந்தி கவலை.
* ஆங்கிலத்தை எதிர்க்கவில்லை, ஆனால் இந்தியாவில் உள்ள குழந்தைகள் தாய்மொழியுடன் ஹிந்தியையும் கற்க வேண்டும், அமித் ஷா பேச்சு.
தி டெலிகிராப்:
* நாகாலாந்தின் கத்தோலிக்க சங்கம் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தின் (யு.சி.சி.) முன்மொழியப்பட்ட அமலாக்கத்தை எதிர்த்துள்ளது, இந்தியாவின் பலமும் ஒற்றுமையும் வேற்றுமையில் உள்ளது; கட்டாய ஒற்றுமை அல்ல என்று கூறியுள்ளது.
– குடந்தை கருணா