பெங்களுரு, ஆக. 16 – பெங்களூரு நகரில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சுதந்திர நாள் விழா நேற்று நடைபெற்றது. அப் போது முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் பிறகு செய்தியாளர் களிடம் டி.கே.சிவகுமார் கூறு கையில், “தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீரை திறந்து விட முடிவு செய்துள்ளோம்.
ஏற்கெனவே அதற்கான பணி தொடங்கி விட்டது. தமிழ்நாடு தண்ணீருக்காக உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது. ஏற்கெனவே எவ்வளவு தண்ணீர் திறந்து விட முடியுமோ அவ்வளவு தண்ணீரை திறந்து விட உத்தரவு பிறப்பித்துள்ளோம். தற்போது வறட்சி காலத்தில் நம் இரு மாநிலத்தின் இடையே பிரச்சினை வேண்டாம். மழை போதுமான அளவு பெய்தால் தேவையான தண்ணீர் வெளியேற் றப்படும்.
கடந்த வருடம் உபரி நீர் வெளியேற்றி 400 டிஎம்சி தண்ணீர் கடலுக்குச் சென்றது. தற்போது தண்ணீர் தேக்கி வைக்க மேகே தாட்டு அணை இருந்திருந்தால் அதிலிருந்து மேலும் அதிக தண்ணீர் தமிழ்நாட்டிற்கு தற் போது கொடுத்திருக்க முடியும். அதற்கும் நீங்கள் ஒப்புதல் தர மறுக்கிறீர்கள்.
எனவே, நான் உங்களிடம் வேண்டி கேட்டுக்கொள்வது உங்கள் நலனுக்காக மேகேதாட்டு அணை கட்ட ஒப்புக்கொள்ளுங்கள். அதன் மூலம் இவ்வாறான காலக் கட்டங்களில் தண்ணீர் திறந்து விட முடியும் அதற்கு நீங்கள் இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.