சென்னை, ஜூலை 27- “மரபு நம் உரிமை; அதை மீட்டெடுத்தல் தமிழர் தம் கடமை” என்பதை குறிப்பிட்டு போடப்பட்டுள்ள நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சமூக வலைத்தளப்பதிவை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
தூங்கா நகருக்கு மேலும் எழில்கூட்டிடும் வகையில் திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது. கண்களைக் கவர்கிறது. சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அதிகம் காணும் பகுதிகளாக கீழடியும், இந்த அரண்மனையும் திகழட்டும். இவற்றைபோலவே. நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்’ திறப்பதற்கான பணி கள் தொல்லியல் துறை சார்பில் விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.