பள்ளிக் கூடமோ தொழுவத்தில்… பசு மாட்டுக்கோ பகட்டான வீடு! நீதியில்லாத நிதிநிலை அறிக்கை!

Viduthalai
2 Min Read

பழைய துணிகளை கூரையாக போர்த்தி நிழல் உண்டாக்கி நடக்கும் வகுப்பறை

ஞாயிறு மலர்

வகுப்பறைகள்

ஞாயிறு மலர்

ரேசன் கடை அல்ல,
இது பள்ளிக்கூடம்தான்

ஞாயிறு மலர்

சிதிலமடைந்த பள்ளிக்கூடம்

ஒன்றிய நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசு கல்வியில் மிகவும் உயரிய இடத்தைப் பெற்றுள்ளது. 60 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு தொடாத உயரங்களைத் தொட்டு உள்ளது என்றார். அவரின் பேச்சு கடைக்கோடி கிராமத்து மாணவர் வரை சிறப்பான பள்ளிக்கட்டமைப்பு, சிறப்பான ஆசிரியர்கள், குடிநீர் வசதி என இந்தியா உலகத்திற்கே கல்வியில் முன்னோடியாக உள்ளது என்ற தொனியில் பேசினார்.

இதனை அடுத்து, பாஜகவின் புகழைப் பாடிக்கொண்டு இருக்கும் நாளிதழ்களில் ஒன்றான தைனிக் பாஸ்கர், மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலுக்கு அருகில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து காணொலி வெளியிட்டது. அப்பள்ளிகள் எல்லாம் ஆங்கிலேயர் வரும் காலத்திற்கு முன்பு எப்படி இருக்கும் என்ற கற்பனை செய்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது,

குறைந்த பட்ச காற்றோட்ட வசதி இல்லாத வகுப்பறை, ஏதோ ஒரு காலத்தில் கட்டப்பட்ட மேற்கூறை, மதிய உணவு சமைக்க தூரத்து தோட்டக்கிணற்றில் இருந்து தலையில் சுமந்துவரப்படும் தண்ணீர், பழைய சாக்குகளைக் கொண்டு அமைக்கப்பட்ட கூடாரங்களில் வகுப்பறை, தலைநகர் பள்ளிக்கல்வித்துறையின் அலுவலகத்தில் ஏதோ ஒரு காலத்தில் மாணவர்களுக்கு கட்டணமில்லா சைக்கிள்கள் என்று அறிவித்து கொள்முதல் செய்யப்பட்ட சைக்கிள்கள் துருப்பிடித்து அப்படியே அலுவலக காலியிடங்களில் கொட்டப்பட்ட அவலம், என பலவற்றை காணொலிகளாக காண்பித்து இருந்தது.

நிதி அமைச்சர் கூறியதற்கும், 20 ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் போக்கும் ஒத்தேவரவில்லை. அப்படி என்றால் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கிய நிதி எல்லாம் எங்கே போகிறது என்றால். பசுமாட்டு தொழுவத்திற்கு குளிர்காலத்தில் ஹீட்டர் அறை, கோடையில் குளிர்சாதன வசதிகொண்ட அறை, பசுமாட்டிற்கு நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ், சாலையில் சுற்றித்திரியும் பசுமாட்டிற்கு தீவனம் வழங்க ஆங்காங்கே நிறுவப்பட்ட கோ ஜேவன் கேந்திர(பசுத்தீணி மய்யங்கள்) அங்கே பசுக்களுக்கு ஓய்வு எடுக்கவும் இட வசதி உண்டு

பாதயாத்திரை செல்லும் சாமியார்களுக்கு அனைத்து வசதிகளும் கொண்ட தங்கும் அறைகள். 20 மணிநேரமும் சுடச்சுட உணவும், மற்றும் மாற்று உடைகள் என பள்ளிக்கல்விதுறை உள்ளிட்ட துறைகளில் நிதி இப்படி திருப்பி விடப்பட்டுள்ளது. பாகிஸ்தான், அல்லது ஆப்கானிஸ்தானில் உள்ள எதிரிகளின் வதை முகாம்கள் போன்று, போபால் அரசுப்பள்ளி வகுப்பறைகளுக்காக கட்டப்பட்ட தாற்காலிகக் கட்டிடம் உள்ளது.

இது ரேசன் கடை அல்ல; தலைநகர் போபாலுக்கு அருகில் உள்ள மிஸ்ரோத சாஸ்கிய நவீன் அரசு உயர்நிலைப்பள்ளி என்றால் நம்ப முடிகிறதா? உயர்நிலைப்பள்ளி சாரதா பிரதான் அரசுப் பள்ளிக்கூடம் ஆகும். முதலாம் வகுப்பு முதல் இண்டர்(10) வகுப்பு வரை இதில் தான் படிக்கவேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *