நீங்கள் ஒரு பெண் – உங்களுக்கு ஒன்றும் தெரியாது பீகார் முதலமைச்சர் சட்டமன்ற பேச்சால் சர்ச்சை

viduthalai
1 Min Read

பாட்னா, ஜூலை 25- பீகார் அர சின் திருத்தப்பட்ட இடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக நேற்று (24.7.2024) சட்டமன்றத் தில் அந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அவையின் மய்யப்பகுதிக்கு சென்று தங்கள் கோரிக்கை தொடர்பாகவும், முதல மைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

இதில் ரேகாதேவி உள்பட பெண் சட்டமன்ற உறுப்பினர் களும் இருந்தனர். பெண் சட்டமன்ற உறுப்பினர்களும் தனக்கு எதிராக முழக்க மிட்டதைப்பார்த்த நிதிஷ்குமார் கோபத்தின் உச்சிக்கே சென்றார். இருக்கையில் இருந்து எழுந்து ரேகா தேவியை பார்த்து கை விரல்களை நீட்டி ஆவேசமாக பேசினார்.

‘நீங்கள் ஒரு பெண். நான் ஆட்சிக்கு வந்த பிறகுதான் பெண்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் கிடைத்தது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் ஒரு பெண், இன்னும் உங்களுக்கு எதுவும் தெரியாது’ என சத்தமாக பேசினார். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிதிஷ்குமாரின் இந்த செயலுக்கு ராஷ்டிரீய ஜனதாதளம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *