அந்தோ, பாவம் கடவுள்! வீடு புகுந்து சாமி சிலைகள் திருட்டு

viduthalai
1 Min Read

ஜோலார்பேட்டை, ஜூலை 20- திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்ப்பேட்டையை அடுத்த சந்தைகோடியூரில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (வயது 52). பீடி தொழிலாளி. இவர் 18.7.2024 அன்று இரவு வழக்கம்போல தனது குடும்பத்துடன் வீட்டு வராண்டாவில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வாலிபர் ஒருவர் வீட்டின் மொட்டைமாடி மீது ஏறி வீட்டுக்குள் புகுந்துள்ளார்.பின்னர் வீட்டில் இருந்த 2 அலைபேசிகள் மற்றும் பூஜை அறையில் இருந்த 3 சாமிசிலைகளை திருடிச்சென்றுள்ளார். அவர் தெரு ஓரத்தில் அமைந்துள்ள முள்வேலி கம்பத்தில் சாமி சிலை தங்கமா?, வெள்ளியா? என உரசி பார்க்கும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *