கழகத் தலைவர் வீர வணக்கம்! சீரிய பகுத்தறிவாளர் கோபி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பி. சண்முகசுந்தரம் மறைந்தாரே!

1 Min Read

கோபி செட்டிப்பாளையம் கொள்கை வீரர் வழக்குரைஞர் வி.பி.சண்முகசுந்தரம் (வயது 80) மறைந்தார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம்.

அவசர கால நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை அழைத்துத் தன் திருமணத்தை நடத்திய கொள்கை உறுதியாளர்.

ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணையத்தில் கலைஞருக்கு ஆதரவாக வாதாடிய வழக்குரைஞர் குழுமத்தில் ஒருவராக இருந்த தி.மு.க. முன்னணி வீரர்.

இவருடைய மூத்த மருமகன் மகாராட்டிர மாநிலத்தில் அய்.ஏ.எஸ். அதிகாரி – இரண்டாவது மருமகன் ஸ்பெயின் நாட்டில் தகவல் நுட்பத் துறை பொறியாளர் ஆவார்.

நம்மிடத்தில் அன்பும், மதிப்பும் கொண்டவர். அவர் பிரிவால் வருந்தும் அவர்தம் வாழ்விணையர் திருமதி கனகாம்பரம், மகள்கள் கனிமொழி, மதுமதி ஆகியோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை தலைவர்
20.7.2024 திராவிடர் கழகம்
குறிப்பு: அவரது மருமகன் அன்பழகன் அய்.ஏ.எஸ். அவர்களிடம் தமிழர் தலைவர் தொலைபேசி மூலம் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *