மணப்பாறையில் பரப்புரை

Viduthalai
1 Min Read

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் 13.07.2024 அன்று மதியம் 4 மணி அளவில் மணப்பாறையில் நடைபெற்றது. இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றிய பொருளாளர் எஸ்..முத்து வரவேற்புரை ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியில் திமுக நகர துணை செயலாளர் துரை.காசிநாதன் தலைமை வகித்தார்.சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் சிறப்புரை ஆற்றினார்.

திமுக வழக்குரைஞர் வேணுகோபால், மு.சோைலராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர், இந்திய ஜனநாயக கட்சி மாதர் சங்க ரேணுகா, எம் ஜே கம்யூனிஸ்ட் கட்சி முரளி, திமுக இளைஞரணி பூபாலன், நகரத் தலைவர் ரமேஷ், ஒன்றிய இளைஞரணி அசோக், ஊராட்சி மன்ற தலைவர் உசிசை முத்து, கோவிந்தன், திமுக நகர செயலாளர் செல்வம், படக்கடை ரவி, விசிக ஆனந்தன் உள்ளிட்ட திராவிடர் கழக அனைத்து அணியைச் சேர்ந்த தோழர்களும், தோழமை இயக்க தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். மணப்பாறை ஒன்றிய தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *