ஏழைகள் பாதிக்கப்படுவதை பற்றி கவலைப்படவில்லை பணவீக்க உயர்வுக்கு மோடியே பொறுப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Viduthalai
0 Min Read

புதுடில்லி, ஜூலை17 – காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- பணவீக்க மனிதர் மோடியின் சாட்டை மீண்டும் மக்களை பதம் பார்த்துள்ளது. மொத்த விலை பணவீக்க விகிதம், ஓராண்டு கால சாதனையை முறியடித்துள்ளது. உணவுப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பணவீக்க உயர்வுக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பு.ஆனால் ஏழைகள் பாதிக்கப்படுவதை பற்றி அவர் கவலைப்படவில்லை. ஏழைகள் வாயில் இருந்து உணவை பறிப்பதுடன், தனது பணக்கார நண்பர்களை மகிழ வைக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *