கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

13.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு அரசு முன்னணியில் உள்ளது. தரவுகளின் அடிப்படையில் செய்தி.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நீட் தேர்வு மோசடியில் பாட்னா காவல்துறையால் கைது செய்யப்பட்ட 13 பேரையும் சி.பி.அய். கட்டுப்பாட்டில் விசாரணைக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் ஒப்புதல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்காது, விளையாட்டு (‘கேலா’) தொடங்கிவிட்டது என மும்பையில் மம்தா தெரிவித்துள்ளார்.
தி இந்து:
* பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் கைது செய்யும் அதிகாரத்தை அமலாக்க இயக்குநரகம் அதிகாரிகள் விருப்பத்தின் பேரில் பயன்படுத்த முடியாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்த வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
தி டெலிகிராப்:
* டில்லி பல்கலைக்கழகம் எல்.எல்.பி. மாணவர்களுக்கு மனுஸ்மிருதியை அறிமுகப்படுத்தும் திட்டம். துணைவேந்தர் நிராகரிப்பு. இந்திய அறிவைப் போதிக்க இன்னும் பல நூல்கள் உள்ளன என கருத்து.
* ராகுல் காந்தி, அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் ஆகியோர் தொலைபேசியில் பேசினர். உரையாடலின் நோக்கம் தெரியவில்லை என்றாலும், இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இது முக்கியமாக கருதப்படுகிறது.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *